Thursday, September 4, 2014

ஈழப் போரின் இறுதி நாட்கள்- புலிகளுக்கு எதிராக, வெளிநாட்டு உளவுத்துறைகள் 19

2009-ம் ஆண்டு இலங்கை, வன்னியில் முடிந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் கடைசியில் தமது கைகளில் வைத்திருந்த ட்ரம்ப் கார்ட்களில் ஒன்று, கரும்புலி தாக்குதல்கள் (மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதல்கள்). அந்த ட்ரம்ப் கார்ட், விடுதலைப் புலிகளுக்கு கடைசி நேரத்தில் எப்படி கைகொடுக்காமல் போனது என்பதை, கடந்த சில அத்தியாயங்களில் பார்த்தோம்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களையும், அப்போது அகப்பட்டுக்கொண்ட சில முக்கிய நபர்கள் பற்றியுமே அதில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், கொழும்புவில் கரும்புலி தாக்குதல்கள் நடத்த அனுப்பப்பட்டவர்கள் 2006-ம் ஆண்டில் இருந்தே சிறிது சிறிதாக அகப்பட தொடங்கி விட்டிருந்தனர்.

இந்த விஷயத்தில், இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகளின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைத்திருந்தது. முக்கியமாக ஐரோப்பிய, மற்றும் வட அமெரிக்க (அமெரிக்கா, கனடா) நாட்டு உளவுத்துறைகள், இலங்கைக்கு கொடுத்த உளவுத் தகவல்கள், அதி பெறுமதி வாய்ந்தனவாக இருந்தன.

இதற்கு மூன்று முக்கிய காரணங்கள்.

1) விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயல்பாட்டாளர்கள் பலருக்கு, வெளிநாடுகளில் கொடுக்கப்பட்டு இருந்த ‘ஓவர் சுதந்திரம்’ என்ன என்பது புரியவில்லை. மேலை நாட்டு உளவுத்துறைகளில் ஆபரேஷன் பட்டர்ன் (operation pattern), அவர்களுக்கு சுத்தமாக புரிந்திருக்கவில்லை. அவர்களில் யாரும், வெளிநாட்டு உளவுத்துறைகளுக்குள் ஊடுருவி இருக்கவும் இல்லை.

அவர்கள் தங்கியிருந்து செயல்பட்ட நாடுகள், அவர்கள் செய்த எந்த விஷயத்தையும் கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற ஒரு தோற்றமே இருந்தது. அந்த தோற்றம் நிஜமானது என்றே அப்பாவித்தனமாக நம்பினார்கள் அவர்கள்.

ஆனால், மேலை நாட்டு உளவுத்துறைகளால், அவர்கள் மீது நீண்ட கயிறு ஒன்று போடப்பட்டிருந்தது. இவர்கள் மீது கட்டப்பட்ட கயிறு மிக நீளமாக இருந்தால், இவர்கள் எங்கு போவதையும் கயிறு இறுக்கி பிடிக்காது. ஆனால், கயிறு இவர்களுடனேயே சென்று கொண்டிருக்கும்.

எங்கே போகிறார்கள், வருகிறார்கள், என்ன போக்குவரத்து என்பதெல்லாம் கயிறுக்கு தெரிந்திருக்கும்.

அவசியம் ஏற்பட்டால், கயிற்றை இழுத்து ஆட்களை பிடிக்கலாம் (அதுதான், பிரான்ஸில் நடந்தது). அல்லது, அப்படியே கயிற்றுடன் நடமாட விட்டு, தொடர்ந்து விபரங்களை அறிந்து கொண்டே இருக்கலாம் (கனடா, பிரிட்டன் உட்பட பல நாடுகளில் தற்போதுகூட நடக்கிறது)

எந்தவொரு நாடும், அது சிறியதோ, பெரியதோ, தீவிரவாத இயக்கம் ஒன்று தமது நாட்டில் வெளிப்படையாக செயல்படுவதை விரும்புவதில்லை என்பது, ராஜதந்திரத்தின் பாலபாடம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக செயல்பட அனுமதிக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள். அப்படி அனுமதிக்கும்போது, இயக்கத்தின் செயல்பாட்டை முழுமையாக அறிந்து வைத்துக்கொண்டே இருப்பார்கள். அது, அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு இஷ்யூ.

ஒரு உதாரணத்துக்கு கனடாவை எடுத்துக் கொள்ளலாம். இலங்கையில் அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் விடுதலைப் புலிகள் இயக்கம் கனடாவில் செயல்படுவதால், கனடாவில் தேசிய பாதுகாப்பு இஷ்யூ என்ன உள்ளது?

நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்படலாம் என்பதே, கனடாவின் நிலைப்பாடு.

கனடாவின் வெளியுறவு அமைச்சு, வெளிநாடுகளில் இயங்கும் கனேடிய தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்காக ஏற்படுத்தியுள்ள foreign services exam பாடத்திட்டத்தை எத்தனைபேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. அதில் மிக தெளிவாக சொல்லப்படும் ஒரு விஷயம், “பல ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள வெளிநாடு ஒன்றில், ஒற்றை துப்பாக்கி ஒன்றை வைத்து அந்த நாட்டுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத இயக்கம் ஒன்று, கனடாவில் செயல்பட்டால், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்”

சில சமயங்களில், இந்த பாலிஸியை சரியாக பின்பற்றாமல், சிக்கலுக்குள்ளான நாடுகள் பல உள்ளன. அதற்கு ஒரு உதாரணமாகவும், கனடாவையே எடுத்துக் கொள்ளலாம்.

1980களில் கனடாவில் மிக பலமாக இருந்த சீக்கிய காலிஸ்தான் இயக்கம், ‘பாப்பர் கல்சா’. இந்திரா காந்தியின் உத்தரவுப்படி நடந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு பின் இந்த இயக்கம் கனடாவில் ஓகோ என்றிருந்தது. அரசியல் காரணங்களுக்காக வெளிப்படையாக செயல்படவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

கனடாவின் கால்கரி நகரில் சீக்கிய கோவிலில் நடந்த கூட்டம் ஒன்றில், பாப்பர் கல்சாவின் தல்விந்தர் சிங் பார்மர், “இந்தியாவுக்கு பாடம் கற்பிக்க, ஏர்-இந்தியாவின் விமானம் வானில் இருந்து உதிர்ந்து தரையில் விழும்” என்று முழக்கம் செய்தபோது, அங்கு கூடியிருந்த 100% சீக்கியர்கள் மத்தியில் கனேடிய உளவுத்துறை CSIS-ன் (சீக்கிய இன) உளவாளிகளும் இருந்தார்கள்.

இவர்கள் வெடிகுண்டு ஒன்றை தயாரித்து, கனடாவின் டங்கன் (பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம்) நகரின் காட்டுப் பகுதியில் அதை வெடிக்க வைத்து பரிசோதித்த போதுகூட, கனேடிய உளவுத்துறை ஆட்கள், அந்த காட்டுக்குள் ஒரு மரத்துக்கு பின்னால் மறைந்திருந்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

ஆனால், 1980களில் இதை சீரியசாக எடுக்காத காரணத்தால், டங்கன் நகரில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு, வான்கூவரில் இருந்து டொரன்டோ, மொன்ட்ரியோல் நகரங்கள் ஊடாக ஏர்-இந்தியாவின் ‘கனிஷ்கா’ விமானத்துக்குள் ஏற்றப்பட்டது.

கனிஷ்கா விமானம் அட்லான்டிக் கடலுக்கு மேல், வெடித்துச் சிதறியதில், 329 பேர் கொல்லப்பட்டனர்.

“இந்தியாவில், பிரதமர் இந்திரா காந்தியால் பஞ்சாப்பில் நடத்தப்பட்ட ப்ளூ ஸ்டார் ஆபரேஷனுக்காக, இந்திய அரசை பழிவாங்க, இந்திய அரசுக்கு சொந்தமான ஏர்-இந்தியா விமானத்தை வீழ்த்தினார்கள், இந்தியாவில் காலிஸ்தான் தனிநாடு கோரிய பாப்பர் கல்சா இயக்கத்தினர்” என்ற வாக்கியத்தில், ‘கனடா’ என்ற சொல் எங்காவது வருகிறதா?

வரவில்லை, அல்லவா?

ஆனால், ஏர்-இந்தியாவின் கனிஷ்கா விமானம் வெடித்துச் சிதறியதில், கொல்லப்பட்ட 329 பேரில், 268 பேர் கனேடிய பிரஜைகள்! (இந்திய பிரஜைகளின் எண்ணிக்கை, வெறும் 24)

இப்படி நாம் எழுதியதும், வாசகர்கள் சிலர் சொல்லக்கூடிய காமென்ட், “அதெல்லாம் சீக்கியர்களின் அட்டகாசம். ஈழ விடுதலை போராளிகள் வேறொரு நாட்டில் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்”.

இதே காமென்ட்டை, கனேடிய தேசிய பாதுகாப்பு பாலிஸி மேக்கிங் ஆட்களிடம் யாராவது, சொல்லியிருக்க மாட்டார்களா?

சொல்லியிருப்பார்கள். அதற்கு அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? கையிலிருந்த பைலை தட்டிப் பார்ப்பார்கள். அதில் கீழ்வரும் டாக்குமென்ட் ஒன்று இருக்கும்:

1984-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சென்னையில் இருந்து கொழும்பு சென்ற ஏர்-லங்கா விமானத்தில் ஏற்றப்பட்டு, கொழும்புவில் வெடிக்க வேண்டிய வெடிகுண்டு ஒன்று, விமானத்தில் ஏற்றப்படாமல், ஏர்-லங்கா விமானம் புறப்பட்டு சென்றது. குண்டு, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெடித்ததில், விமான நிலைய டேர்மினல் பில்டிங் கடும் சேதமடைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயமடைந்தனர்.

இதற்கும் ஒரு காமென்ட் அடிக்கலாம். “அது விடுதலைப் புலிகள் அல்ல, வேறு இயக்கம் (தமிழீழ ராணுவம் என்ற இயக்கம்)”

சுவாரசியமாக அப்படியே விவாதித்துக் கொண்டு போகலாம். லேசில், முடிவுவராது. அதில் சிக்கல் இல்லை.

சிக்கல் என்னவென்றால், நாம் மேலே குறிப்பிட்ட இரண்டையும் வைத்து, கனேடிய அரசு தமது தேசிய பாதுகாப்பு தொடர்பாக பாலிஸி வைத்திருக்கிறது. கனடாவில் இருந்து செயல்படும் போது, அதை புரிந்து கொண்டு செயல்பட்டால், பாதிப்பு ஏற்படாது.

“இது முட்டாள்தனமான பாலிஸி” என்று ‘முட்டாள் கனடா’வின் பாலிஸியை ஏற்று கொள்ளாமல் செயல்பட்டால், என்ன விளைவு ஏற்படும்?

விளைவு இனித்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை…,

ஏற்கனவே, 2009-ம் ஆண்டே ஏற்பட்டு விட்டது.

இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் கொடுத்ததற்கு நாம் குறிப்பிட்ட மூன்று காரணங்களில் ஒன்று இது. அடுத்த காரணங்களை, அடுத்த அத்தியாயத்தில் படியுங்கள்… (தொடரும்)

ஈழப் போரின் இறுதி நாட்கள்:கொழும்புவில் கரும்புலிகள் இருப்பிடத்துக்கு லீட் கொடுத்த MI-5.உளவுத்துறை 18

ஜனாதிபதி ராஜபக்ஷே மீது தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக உடலில் வெடிகுண்டு கட்டப்பட்ட நிலையில் ஒருவரை, கண்காட்சி நடந்த மண்டபத்துக்குள் அழைத்துச் செல்லும் ஆர்மி அங்கிளின் திட்டம், அவரது வாகனத்தை மண்டப காம்பவுண்டுக்குள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாத காரணத்தால், திட்டம் தோல்வியில் முடிந்தது.

ஆர்மி அங்கிளின் ஜீப் BMICH மண்டப கேட்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. அதிலிருந்து இறங்கிய ஆர்மி அங்கிள், மண்டபத்துக்கு உள்ளே செல்ல, ராணுவ சீருடையில் இருந்த தற்கொலை தாக்குதலாளி அங்கிருந்து நகர்ந்து தமது இடத்துக்கு சென்றுவிட்டார்.

பின்னர் ஆர்மி அங்கிள் அகப்பட்டுக்கொண்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் பிரிவை சேர்ந்த தற்கொலை தாக்குதலாளிக்காக, பிரத்தியேகமாக ராணுவ சீருடை ஒன்றை ஆர்மி அங்கிள் தயாரித்து கொடுத்திருந்தார் என்ற தகவலும் தெரிய வந்திருந்தது.

ஜனாதிபதி ராஜபக்ஷே மீது இந்த தற்கொலை தாக்குதல் முயற்சி வெற்றியடையாத நிலையில், அப்போது வன்னிப் பகுதியில் இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்தது (அதிலிருந்து மூன்றரை மாதத்தில் யுத்தம் முடிந்தது).

யுத்த முனையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மிகுந்த நெருக்கடி நிலையில் இருந்தது. கொழும்பு BMICH மண்டபத்தில் தற்கொலை தாக்குதல் முயற்சி செய்யப்பட்ட 2009-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4-ம் தேதி, வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை இழந்து விட்டிருந்தனர்.

இலங்கை ராணுவத்தின் 57-வது டிவிஷன், கிளிநொச்சி நகரை கைப்பற்றி (ஜனவரி 2-ம் தேதி), ராமநாதபுரம் (ஜனவரி 17-ம் தேதி), விசுவமடு டவுனையும் கைப்பற்றி (ஜனவரி 28-ம் தேதி), தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. 58-வது டிவிஷன், விசுவமடு டவுனில் 57-வது படைப்பிரிவுடன் இணைந்துகொண்டு, தேவிபுரம் கிராமத்தை கைப்பற்றியிருந்தது (பிப்ரவரி, 20-ம் தேதி) 59-வது படைப்பிரிவு, முல்லைத்தீவு நகரை கைப்பற்றிவிட்டது (ஜனவரி 25-ம் தேதி).

ராணுவ நகர்வின் வேகத்தை விடுதலைப்புலிகளால் தடுக்க முடியவில்லை. புலிகளின் ஆயுதக் கையிருப்பு குறைந்து கொண்டிருந்தது. புதிதாக ஆயுத சப்ளை வருவதற்கான சந்தர்ப்பங்கள் அனைத்தும் அடைபட்டு விட்டிருந்தன.

தொடர்ந்தும் ராணுவம் முன்னேறுவதை தடுக்க வேண்டுமென்றால், யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட வேண்டும். இந்த நிலையில்தான், ஜனாதிபதி ராஜபக்ஷே மீதான தாக்குதல் திட்டம் நடைபெறவில்லை என்ற விபரத்தை, அய்யா, தமது லண்டன் தொடர்பாளர் மூலம் வன்னியில் இருந்த விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுக்கு தெரிவித்தார்.

இதையடுத்து, புலிகளின் உளவுப் பிரிவில் இருந்து அவசர உத்தரவு அய்யாவுக்கு வந்தது.

“மிக விரைவில், மற்றொரு தாக்குதலுக்கு ஏற்பாடு செய்யவும். அந்த தாக்குதல் தோல்வியடையவே கூடாது. அந்த தாக்குதல் முயற்சியில் உங்கள் (அய்யா) உயிரே போனால்கூட, தாக்குதல் வெற்றியில் முடிய வேண்டும்.

இது மிக மிக அவசரம் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் காப்பாற்றப்படுவதற்கு அவசியமான யுத்த நிறுத்தத்தை, கொழும்புவில் நடக்கும் தாக்குதலே கொண்டுவர முடியும். உடனே செய்யவும்” என்பதே அந்த அவசர தகவல் என்பதை, விசாரணையின்போது அய்யா தெரிவித்தார்.

அதையடுத்தே, ஜனாதிபதி ராஜபக்ஷே ஜோர்தான் நாட்டுக்கு புறப்பட்டு செல்லும்போது (மே, 14-ம் தேதி), விமான நிலையம் செல்லும் பாதையில் தற்கொலை தாக்குதல் நடத்த அய்யா, ஆர்மி அங்கிள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்குள் ஐயா கைது செய்யப்பட்டு விட்டார் (மே, 10-ம் தேதி). ஆர்மி அங்கிளும் சிக்கிக் கொண்டார்.

ஜனாதிபதி ராஜபக்ஷே ஜோர்தான் நாட்டுக்கு புறப்பட்டு செல்லும்போது நடத்த வேண்டிய தற்கொலை தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருள், மற்றும் தற்கொலை அங்கிகள் எங்கே என அய்யாவிடம் விசாரித்தபோது, அவை கொழும்புவில் யாரோ ஒருவரிடம் இருப்பதாக தெரிவித்தார்.

அந்த நபர் யார், முகவரி என்ன என்ற விபரங்கள் அய்யாவுக்கு தெரிந்திருக்கவில்லை.

“யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதால், தற்கொலை அங்கிகள் அணிந்த மொத்தம் 4 பேரை ஒரே நேரத்தில் வெடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த ஐயா, தாம் 4 பேரை தயார் செய்து வைத்திருப்பதாகவும், அவர்கள் அணிய வேண்டிய தற்கொலை அங்கிகள் எங்கேயுள்ளன என்ற விபரம், தாக்குதல் நடக்கும் தினத்தன்றுதான் தமக்கு வந்து சேரும் என்றும் தெரிவித்தார்.

தாக்குதல் அங்கிகள் கொழும்புவில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை தவிர, வேறு விபரம் ஏதும் உளவுத்துறைக்கு கிடைக்கவில்லை.

“தாக்குதல் நடக்கும் தினத்தில், அந்த தற்கொலை அங்கிகள் இருக்கும் இடத்தை எப்படி தெரிந்து கொள்வீர்கள்?”

“அன்று காலை, லண்டனில் உள்ள தொடர்பாளரிடம் இருந்து போன் வரும். அவர்தான், தற்கொலை அங்கிகளை எடுக்க வேண்டிய முகவரியை தெரிவிப்பார்”

இவர்களுக்கும், வன்னிக்கும் இடையிலான தொடர்புகள், லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் தொடர்பாளர் ஒருவர் மூலம் நடக்கிறது என்ற விபரத்தை, ஏற்கனவே தெரிந்து கொண்ட இலங்கை உளவுத்துறை, இப்போது லண்டன் தொடர்பாளரிடம் இருந்து தற்கொலை அங்கிகள் இருக்கும் முகவரியை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காரணம், அய்யா அகப்பட்டுக்கொண்ட விஷயம் தெரியவந்ததும், விடுதலைப் புலிகள், கொழும்புவில் உள்ள வேறு செயல்பாட்டாளரிடம் இந்த ஆபரேஷனை கொடுத்து விடுவார்கள். ஏற்கனவே மறைவிடம் ஒன்றில் தற்கொலை அங்கிகள் தயாராக இருப்பதால், புதிய நபர், ஜனாதிபதி ராஜபக்ஷே மீதான மற்றொரு தாக்குதலை திட்டமிட்டு விடுவார்.

இதனால், தற்கொலை அங்கிகளை உடனே கைப்பற்ற வேண்டும். அவை எங்கே உள்ளன என்ற விபரம் தெரிந்த நபர், லண்டனில் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பிரிட்டிஷ் உளவுத்துறையின் உதவி நாடப்பட்டது.

லண்டன் தொடர்பாளரின் பிரிட்டிஷ் போன் இலக்கம், ஐயாவிடம் இருந்தது. அந்த போன் இலக்கம், பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் இலங்கை உளவுத்துறையால் கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் உளவுத்துறை, ஓரிரு மணி நேரத்திலேயே, லண்டனில் இருந்த நபரின் முழு பின்னணியையும் தெரிந்துகொண்டு, அவரை தமது ஹை-அலர்ட் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தனர்.

இதற்கு காரணம், லண்டனில் அப்போது இலங்கையில் நடக்கும் யுத்தத்தை நிறுத்த சொல்லி பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் இருந்தவர்களில் முக்கியஸ்தர்கள் என கருதப்பட்ட சுமார் 100 பேரை, பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-5, ஓசைப்படாமல் கண்காணித்து கொண்டிருந்தது.

அவர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்திய ஒன்றுக்கு மேற்பட்ட போன் இலக்கங்கள், இமெயில் தொடர்புகள், அனைத்தும் கண்காணிப்பில் இருந்தன.

இது வெளிநாட்டு உளவுத்துறைகள் வழமையாக செய்யும் காரியம்தான். எல்லாவற்றையும், ஓசைப்படாமல் கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள். அரசியல் காரணங்களுக்காக நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டார்கள். ஆனால், வேறு விவகாரங்களில், தாம் தெரிந்துகொண்ட தகவல்களை உபயோகித்துக் கொள்வார்கள். சிலரை, 5, 10 ஆண்டுகள்கூட தமது வாட்ச் லிஸ்ட்டில் வைத்திருப்பார்கள்.

இலங்கை உளவுத்துறை கொடுத்த போன் நம்பர், ஏற்கனவே, பிரிட்டிஷ் உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்தில் இருந்த போன் இலக்கம். அதனுடன் தொடர்பான நபர் யார் என்பதை தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் உளவுத்துறை, அந்த நபரின் மற்றைய போன் இலக்கங்கள், மற்றும் இதர தொடர்புகளை ஓரிரு மணி நேரத்துக்கு உள்ளேயே, தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவந்தது.

இந்த நபர், கொழும்புவில் இருந்த அய்யாவுடன் தொடர்பு வைத்துக்கொண்ட போன் இலக்கம், ஒரு பிரிட்டிஷ் செல் இலக்கம். இதே நபர், மற்றொரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒரு லேன்ட்லைன் இலக்கத்தையும் உபயோகித்து வந்தார் என்ற விபரம், பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் ஏற்கனவே இருந்தது.

இந்த லேன்ட் லைன் இலக்கத்தில் இருந்து அவர், ஐயாவுக்கு ஒருபோதும் போன் பண்ணியிருக்கவில்லை. ஆனால், கொழும்புவில் இருந்த மற்றொரு இலக்கத்துக்கு வாரம் ஒரு தடவையாவது போன் பண்ணியிருந்தது தெரியவந்தது.

லண்டனில் இருந்த நபரின் பெயர், விபரங்களையும், கொழும்புவில் அவர் வாரம் ஒருதடவை தொடர்பு கொண்ட போன் இலக்கத்தையும், இலங்கை உளவுத்துறைக்கு கொடுத்தது, பிரிட்டிஷ் உளவுத்துறை. அவர்கள் கொடுத்த கொழும்பு போன் இலக்கத்தை சுலபமாக ட்ரேஸ் பண்ணியது இலங்கை உளவுத்துறை SIS.

அந்த போனுக்கு உரிய நபர், கொழும்புவில், வெள்ளவத்தை பகுதியில் 37-வது லேன் வீதியில் இருந்த ‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்” என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தார்.

இந்த வீட்டை முற்றுகையிட்டது உளவுத்துறை. அப்போது வீட்டில் இருந்தவர், தாம் சூழ்ந்து கொள்ளப்பட்டு விட்டோம் என்பது தெரிந்தவுடன், ‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்’ பில்டிங்கின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அடையாள அட்டையில் இருந்து, அவரது பெயர், சதீஷ் குமார் சுஜிந்தன் (32) என்று தெரியவந்தது.

(பிரிட்டிஷ் உளவுத்துறை, புலிகளின் லண்டன் தொடர்பாளரின் பெயர் மற்றும் விபரங்களை இலங்கை உளவுத்துறை SIS-க்கு கொடுத்திருந்தது அல்லவா? அந்த பெயருடன், ‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்டில்’ தற்கொலை செய்தவரின் பெயரை இணைத்து விசாரித்தபோது, இவர் லண்டனில் இருந்தவரின் சகோதரர்தான் என்பதை தெரிந்து கொண்டார்கள்)

‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்’ வீட்டை சோதனையிட்டபோது, 4 தற்கொலை அங்கிகள் கிடைத்தன.

இவற்றில் ஒன்று, இதுவரை இலங்கையில் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கிகளில் மிக அதிக எடையுள்ள வெடிபொருளை கொண்டது. 15 கிலோ வெடிப்பொருள் கொண்ட அந்த தற்கொலை அங்கி, ஜனாதிபதி ராஜபக்ஷேவை குறிவைக்க தயாரிக்கப்பட்டது என பின்னர் விசாரணையில் தெரியவந்தது!

இலங்கையில் யுத்தம் முடிந்த இறுதி நாட்களில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே மயிரிழையில் உயிர் தப்பினார் என்றே சொல்லலாம். ஏன் தெரியுமா?

‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்’ வீட்டை சோதனையிட்டு, 4 தற்கொலை அங்கிகளை கைப்பற்றிய தினம் எது தெரியுமா? மே 14-ம் தேதி! ஜனாதிபதி ராஜபக்ஷே ஜோர்தான் நாட்டுக்கு புறப்பட்டு சென்ற அதே மே 14-ம் தேதி!

‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்டில்’ கிடைத்த விபரங்களில் இருந்து, சங்கிலித் தொடராக பலர் கைதாகினர். இவர்களில், தற்கொலை தாக்குதல் நடத்த தயாராக இருந்த கரும்புலிகளும் அடக்கம்.


சன்பிளவர் அப்பார்ட்மென்ட்டில்’ கிடைத்த விபரங்களில் இருந்து, சங்கிலித் தொடராக பலர் கைதாகினர். இவர்களில், தற்கொலை தாக்குதல் நடத்த தயாராக இருந்த கரும்புலிகளும் அடக்கம்.

அந்த பட்டியலை பார்க்க விரும்பினால்,  கிழே உள்ள இணையத்தை  கிளிக் செய்யவும். (பட்டியலில், 16-வது சம்பவமாக ‘சன்பிளவர் அப்பார்ட்மென்ட்’ சம்பவம் உள்ளது)

(தொடரும்…)

- See more at: http://www.athirady.com/tamil-news/news/434230.html#sthash.glr8RiEb.dpuf


http://www.satp.org/satporgtp/countries/shrilanka/database/IncidentsinColombo_2009.htm


 
Terrorism-related Incidents in Colombo 2009
2009

No.

Date

Description

1

January 3

A minor explosion occurred inside a van number HD-8194 near the Red Mosque in the Petta area of Colombo at around 4.55pm (SLST), wounding three civilians and damaging two vehicles and a shop nearby. According to the report, suspected LTTE militants had placed a small improvised explosive device inside the van.

2

January 3

Matale Police recovered three claymore mines, two T-56 weapons and two-hundred rounds of ammunition hidden in the Ratwatta Watta estate.

3

January 2

A LTTE suicide bomber blew himself up killing three persons, including two Airmen, and injuring 37 others at the entrance to the Air Force camp in Slave Island in Colombo at around 5.15pm (SLST). An accomplice of the suicide bomber has been arrested.

4

January 7

A minor blast occurred along the railway track at Mount Lavinia, a Colombo suburb. Police spokesman Ranjith Gunasekara said the blast damaged the rail track slightly but no injuries were reported.

5

January 8

Editor of the Sunday Leader, Lasantha Wickramatunga, was shot dead by unidentified assailants on a motorcycle at Attidiya near Mt. Lavinia in Colombo. Wickramatunga was driving to office when the assailants targeted him near the Bakery junction in Attidiya.

6 January 16
A minor explosion occurred in a bare land at Alwis Town in Wattala, a Colombo suburb, Military spokesman Brigadier Udaya Nanayakkara said. No loss of life or damage to property was reported. The Police later recovered another unexploded bomb and a suicide kit from the incident site.

7

January 22

Upali Tennekoon, Editor of Rivira, and his wife were assaulted and stabbed by unidentified assailants near Imbulgoda in Colombo, 200 metres away from his residence, when he was driving to work. Rivira has a political orientation sympathetic to the Government and is supportive of the Security Forces action in Wanni.

8

January 22

A prominent LTTE supporter, Prakash Shakthi Velupillai, who was posing as a journalist, was arrested at the Bandaranaike International Airport in Colombo while attempting to fly to Singapore. Minister Keheliya Rambukwella said initial investigation revealed that Prakash is a hardcore LTTE supporter. He claimed the journalist was attached to the International Federation of Journalists which had its office in Colombo 7, and was headed by a prominent journalist.

9

January 23

Police arrested a LTTE militant who was deported from Malaysia for overstaying at the Bandaranaike International Airport (BIA) in Colombo. Senior Superintendent of Police Ranjith Gunasekera said the Katunayake Police arrested four suspects on information from a civilian in the BIA at around 12.15 pm (SLST). The four suspects, including two Sinhalese, a Tamil and a Muslim, were deported from Malaysia.

10

January 29

SFs recovered a suicide jacket in Dehiwala, a suburb of Colombo. According to Police, the suicide jacket, weighing four and half kilograms, was found in an abandoned land at Wasala road in Dehiwala on information from a civilian.

11 February 20
Two LTTE light aircrafts were shot down by the Security Forces in Colombo and Katunayake following an attempt by the outfit to bomb Colombo city. However, one of the aircrafts managed to drop a bomb on the Inland Revenue Department injuring at least 50 persons and destroying the building. Two of the wounded persons reportedly succumbed to their injuries later.

12
March 4

The Sri Lanka Police arrested three suspected LTTE militants, including two females, from a house belonging to a foreigner who lives in Homagama, a suburb of Colombo. The foreign national who gave the lodging facilities for the three LTTE suspects is married to a woman from the Eastern Province, sources said.

13 March 23
The Colombo Crimes Division recovered 280 kilograms of C4 high explosives and a large amount of weapons hidden by the LTTE in the Mattakkuliya area to launch a major attack by targeting Colombo city. According to Police, these high explosives and weapons were hidden in a house in Church Road. The recoveries included 280 kilograms of C4 high explosives, ten 4-millimeter hand grenades, 28 bullets, 30 hand grenades, five detonators, two remote controllers, 693 T-56 bullets and parts of some T-56 weapons. Police recovered these high explosives along with two suspects following information given by a LTTE intelligence unit leader who was arrested by the Colombo Terrorist Investigation Department several days ago. The LTTE intelligence unit leader has also reportedly disclosed information on a major attack planned by the LTTE targeting Colombo.

14 March 24
The Colombo Chief Magistrate Court ordered to prevent eight directors of the LTTE front TRO from leaving the country. While hearing the case charging TRO of raising funds for the LTTE, the Chief Magistrate, Nishantha Hapuarachchi, also issued arrest warrants against seven of the directors, who were absent in the Court. These directors are presently believed to be in the un-cleared areas (area not under Government control). According to sources, two of them are said to be a 'lieutenant' and a 'colonel' of the LTTE. Meanwhile, the Chief Magistrate released Sinnaiah Ramalingam, the only director who appeared in the Court, on a SLR 500,000 surety bail.

15

May 13

The SFs recovered 18 powerful claymore mines, 85 kilograms of high-powered explosives, two radio sets and two pull switch from a garage premises on Lucas Mawatha in Colombo.

16

May 14

A 32-year-old LTTE suspect committed suicide by jumping out of a seven storied building at 37th Lane in the Wellawatte area of Colombo during a raid conducted by the SFs. The suspect, Sathish Kumar, a resident of Jaffna, had been living in Sunflower Court Wellawatte. Police recovered four suicide jackets and a claymore bomb from the flat. According to Wellawatte Police three other suspects who were arrested have been identified as suicide bombers.

17 May 20
Police found several explosives, including claymore mines, from Athurugiriya area, a suburb of Colombo. Senior Superintended of Police Ranjith Gunasekara said these explosives were recovered on the basis of information obtained from a recently arrested LTTE militant. Police recovered two claymore mines each weighing 2.5 kilograms and packed with C4 high explosives and two other explosive devices.

18
June 15

The Terrorist Investigation Division (TID) arrested a director of a leading pharmaceutical company at Wellawatte near capital Colombo for having links with the LTTE, and recovered a stock of medical items valued at around SNR 2.5 million which were prepared to be sent to the LTTE. Police spokesman Ranjith Gunasekera said the stock of medical items meant for the LTTE were recovered by the TID hidden inside a house in Perera Avenue in Wellawatte.  He noted that the suspect had maintained close links with the LTTE including the outfit’s medical wing chief Selvanayagam Kugarajan alias Manoj.

19
June 20

Police arrested three suspected LTTE militants who had allegedly plotted to assassinate President Mahinda Rajapakse. According to Police spokesman Ranjith Gunasekara, two suspects were arrested near the Ayurveda Hospital in Rajagiriya area and on information provided by them the third suspect was arrested at Valachchenai area in the Eastern Province. The three suspected LTTE cadres are aged between 15-16 years, the Police said.

20 July 20
The Sri Lanka Police arrested the chief of the LTTE "Eelam Bank", Colin Ruban, in capital Colombo. Colombo Page reported that Colin was arrested from a lodge on information revealed by intelligence units. According to sources, he was a resident of Puthukuddiyiruppu and had reached the welfare centers in Vavuniya during the last stages of the war. However, he later arrived in Colombo by paying SLR 250000 to a person who helped him to reach the capital.

21 July 27
Daily Mirror reports that a suspected cadre of the LTTE who had escaped from an IDP camp in Vavuniya District and his father who had brought him to capital Colombo were arrested by the Colombo Central Division Police while they were hiding in a lodge in the city. The father of the suspect is a Sinhalese and is married to a Tamil. The father had been brought up by a Tamil businessman in Nochchiyagama, to whom he had been given over by his parents when he was a small child, a Police source said. The Tamil businessman had given him a Tamil name and he had later worked as a driver at the Health Ministry before retiring. One of his sons had joined the LTTE but had fled from Mullaitivu and had taken up residence in Nochchiyagama for some time. During the last stages of the war in Puthumattalan the son had crossed over to the Government controlled areas disguising himself as an ordinary citizen. He had been later referred to an IDP camp in Vavuniya from where he had escaped and had joined his father in Nochchiyagama. His father had then accompanied him to Colombo with the intention of sending him abroad.

22

August 5

The Colombo Chief Magistrate Nishantha Hapuaarachchi allowed the Police to further detain and question the leader of the women’s political wing of the LTTE, Subramanium Sivagami alias Tamilini, BBC reports. The magistrate allowed the Police to detain Tamilini until August 28. Tamilini, who fled the 'No Fire Zone' (NFZ) in the north and surrendered to the authorities in May 2009, has since been detained by the Police.

23

August 6

A hand grenade was recovered from the Sapugaskanda area in Makola.

24

August 6

Police on a tip off conducted a search on Erathusa Road in the Wellawatte area of Colombo District and found two suicide jackets, one micro pistol, two hand grenades and two electric detonators.

25 August 11
The Colombo Crimes Division (CCD) seized 20 powerful side chargers from the Uppukulam area of Mannar District and averted a possible suicide mission in Colombo. Senior Superintendent of Police (SSP) Ranjith Gunasegaram said CCD personnel seized a Hiace van carrying 20 side chargers, each weighing five kilograms, in the Uppukulam area on information divulged by three LTTE suspects who were arrested earlier. Two LTTE suspects were arrested from Badovita in Mt. Lavinia on August 10 and the other was arrested from Uppukulam in Mannar on August 11, he added. "These side chargers were meant to be dispatched to Colombo on a suicide mission. Timely action of the CCD team averted the possible mission," SSP Gunasegaram told Daily News.

26 August 15
Police recovered a bomb inside a culvert in the Mahiyangana city of capital Colombo in the evening of August 15. The Police confirmed that a bomb weighing 20 kilograms was found on information given by an arrested suspected LTTE militant.

27

August 21

Police in the capital Colombo seized the vehicle of the Tamil National Alliance parliamentarian S. Jeyanandamoorthy over his alleged links with the LTTE. The vehicle was seized from the residence of the Madiwela Member of Parliament. The Police said they have received complaints that the vehicle had been used to transport suspected LTTE cadres in the past. Jeyanandamoorthy is currently out of the country.

28

August 24

August 24 The NIB uncovered a plan to assassinate Defence Secretary Gotabhaya Rajapakse with the recovery of a suicide kit, arms and ammunition from a house in Mutwal, a suburb in the capital Colombo. According to the Deputy Inspector General of Police, Nimal Mediwaka, the NIB officials found a cache of arms and ammunition, including a suicide kit weighing over five kilograms, a machine gun and 13 Cyanide capsules, concealed in a cupboard in a housing unit at Mutwal under the directive of a LTTE leader in Colombo. The unnamed LTTE leader had reportedly planned to launch a well coordinated attack on the Defence Secretary. "It is believed that they had planned to hurl hand grenades at Rajapakse’s motorcade as a part of the massive assassination bid. The terrorists had planned to launch this attack using a explosive laden motor bike. Officials are combing the island to trace the explosive laden bike and the suicide cadre who were directed to crash into the motorcade of the Defence Secretary," Mediwaka said. The Defence Secretary had earlier in 2006 survived a LTTE suicide attempt in Colombo escaping with minor injuries although eight of his security guards were killed.

29 August 28
Police conducted a search operation in the Angulana area of capital Colombo and recovered two claymore mines buried near the bus stand in front of the Angulana church at around 1.00pm (SLST). While one of the mines weighed approximately 24.3 kilograms the other weighed about 11.5 kilograms.

30 August 28
Police recovered one hand grenade from the Thelawala road in Ratmalana.

31 September 1
Police arrested a female LTTE militant in the Wellawatte area of capital Colombo. According to the Wellawatte Police, the suspected female LTTE cadre, who had worked with the former LTTE political wing head S.P. Thamilchelvan, was arrested while she was temporarily lodging in the area waiting to leave the country. She has disclosed to the Police that her husband has been killed while fighting for the LTTE.

32 September 4
Police arrested a LTTE militant, who has given armed training to LTTE cadres earlier, from the Katunayake airport in capital Colombo while he was attempting to leave the country. Intelligence sources said Sundaralingam Jesudasan was apprehended when he tried to escape through illegal means. He is a resident of Batticaloa and had been attached to an LTTE camp in Vakarai and later he had gone abroad. He had returned to the country recently according to initial inquiries.

33.

September 8

Police arrested a LTTE militant from a hotel in the Mount Lavinia area. He had led a 40-cadre group at Vellamullivaikkal area in the final battle against the Army. After surrendering to the Sri Lanka Army, he managed to escape from a welfare camp in Vavuniya later by giving bribes, Police said.

34.

September 12

Police raided an establishment in the Sea Street area, said to be involved in sending escapees from the Vavuniya Welfare Centres abroad, and arrested six persons along with a number of forged passports, visas and other documents.

35

October 3

Sri Lanka Police arrested three Sinhala nationals, who have allegedly supported former LTTE cadres to leave the country through sea routes illegally. Senior Deputy Inspector General of Police Nimal Mediwaka said that the three suspects were arrested from a hotel at Vaikkala area in Negombo. These three suspects have reportedly supported former LTTE militants who fled the welfare camps in Vavuniya to leave for Australia by boats.

36 October 8
Police, acting on civilian information, arrested a top LTTE militant from a hotel in the Mount Lavinia area. The militant had reportedly led a 40-cadre group at Wellamulliwaikkal area in the final battle against the SLA. He later surrendered to the SLA after he was injured during the final battle. However, he managed to escape from a welfare camp in Vavuniya by giving bribes, Police added.

37 October 10
Police arrested the head of a LTTE run computer institute Vanni Tec from Negombo in the capital Colombo. The suspect, identified as Velayudan, had been in charge of Vanni Tec in Kilinochchi, the Police added.

38

October 15

Police arrested two suspected LTTE militants from the Kochchikade area. The Senior Deputy Inspector General Nimal Mediwaka said the two suspects were arrested on information provided by another LTTE suspect detained earlier. The duo reportedly had provided information to the LTTE cadres and supported transportation of illegal weapons.

39

October 24

Police arrested two suspected LTTE militants from the capital Colombo. The Police found some explosives in the possession of the two suspects, who were arrested on information given by another LTTE suspect who is already in Police custody.

40 November 2
Sri Lanka Police arrested three top LTTE cadres in the morning of November 2 from Grandpass, a suburb of capital Colombo. The Senior Deputy Inspector General of Police, Nimal Mediwaka, said a special Police unit arrested the three militants during a raid conducted on receipt of information given by another LTTE suspect who is currently in custody.

41

November 10

500 grams of gelignite and nine detonators were found from the Wattala area of Colombo.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: இந்தியாவை விட, அதிகம் உதவிய வெளிநாட்டு உளவுத்துறை 17

ஆர்மி அங்கிள் என அழைக்கப்பட்ட லெப்டினெட் கர்னல் ரஞ்சித் பெரேரா இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டபோது பல விஷயங்கள் தெரியவந்தன. விடுதலைப் புலிகளுக்கு, அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவராமல் தடுத்திருக்கக்கூடிய சந்தர்ப்பம், இந்த ரஞ்சித் பெரேரா, மற்றும் ஐயாவின் கைதுகளுடன் கைநழுவி போனது.

யுத்தம் முடிவதற்கு முன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவை மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்வதற்கு போடப்பட்ட திட்டமே, இவர்களது கைதுகளுடன் நடக்க முடியாது போனது.

2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ஜனாதிபதி கொல்லப்பட்டிருந்தால், வன்னியில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் குறைந்த பட்சம் தற்காலிகமாக சில மாதங்களுக்காவது நின்று போயிருக்கும். விடுதலைப் புலிகளுக்கு மூச்சுவிடவோ, தம்மை பலப்படுத்திக் கொள்ளவோ, அல்லது முள்ளிவாய்க்காலில் இருந்து தலைவர், மற்றும் தளபதிகள் தப்பித்துச் செல்லவோ ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

வெளிநாட்டு உளவுத்துறை ஒன்று, கொழும்புவில் இருந்து இயங்கிய விடுதலைப்புலிகளின் இணைப்பாளரின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்ததுடன் சங்கிலி தொடராக இடம்பெற்ற கைதுகளில் விடுதலைப் புலிகளின் இறுதித் திட்டம் நடக்காமலே போனது.

யுத்தத்தை திரைமறைவில் முடித்து வைத்த கைகளில் பல, வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் கைகள்தான்.

இப்போது யுத்தம் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், “இலங்கையின் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இந்திய மத்திய அரசு மறைமுகமாக உதவினார்கள், அந்த உதவி செய்தார்கள், இந்த உதவி செய்தார்கள் என்றெல்லாம் இப்போதும் சொல்பவர்கள் உள்ளார்கள்.

இந்தக் கதைகளில் பலவற்றை கேட்டு இந்திய அரசு தலையில் அடித்து, விதியை நொந்து கொள்வதை தவிர வேறு ஏதும் செய்ய அவர்களால் முடியாது. காரணம், விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இலங்கை அரசுக்கு கிடைத்த வெளிநாட்டு உதவிகளில், இந்திய உதவி 10 சதவீதம்கூட கிடையாது. மீதி எல்லாமே, வெளிநாட்டு – மேற்குலக நாடுகளின் – உளவுத்துறைகளின் பங்களிப்புதான்.

இறுதி யுத்தம் நடந்த கடைசி கட்டத்தில்தான் மேலைநாட்டு உளவுப் பிரிவுகள் மும்மரமாக உதவிகள் செய்தன என்றில்லை. 2007-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிக்க அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. எப்படி உதவியது என்று இந்த தொடரின் கடந்த அத்தியாயங்களில் விலாவாரியாக எழுதியிருந்தோம்.

அதிகம் போவானேன், யுத்தம் முடியும்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எந்தெந்த முக்கிய புள்ளிகள் உயிருடன் இருக்கக்கூடாது என ஒரு பட்டியலையே தயாரித்து வைத்திருந்தது ஒரு வெளிநாட்டு உளவுத்துறை. அந்தப் பட்டியலில் இருந்த யாரும் இப்போது உயிருடன் இல்லை.

2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி. அன்று, அதிகாலை வானில் இருந்து நடந்த விமானக் குண்டுவீச்சில், விடுதலைப் புலிகளின் அப்போதைய அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் கொல்லப்பட்டார்.

அப்போது, கிளிநொச்சிக்கு அருகில்கூட இலங்கை ராணுவம் வந்திருக்கவில்லை.

இருள் விலகாத நேரத்தில் கொழும்பு கட்டுநாயக விமானப்படை தளத்தில் இருந்து இரு விமானங்கள், (ஒன்று மிக்-27 ரக விமானம், மற்றது கிஃபிர் ரக விமானம்) புறப்பட்டன.

அப்போதைய இலங்கை விமானப்படையின் விமானங்களால், துல்லியமாக இரவு நேர தாக்குதல்களை செய்ய முடியாது. மிக்-27 விமானிகளால், Night Vision Goggles உபகரணங்களை வைத்து ஓரளவுக்கு சுமாராக இலக்கு வைக்க முடியும். ஆனால், கிஃபிர் விமானிகளால் அதுகூட முடியாது. அதில் பயிற்சியும் கிடையாது.

இலக்குகளை மிக துல்லியமாக, விமான காக்பிட்டின் டிஸ்பிளேயில் தெரியும்படி செய்தால் மட்டுமே குறிவைத்து தாக்க முடியும். அதற்கு ஒரு சாட்டலைட் டேட்டா டரான்ஸ்மிஷன் வசதி வேண்டும். அந்த வசதி, கடைசிவரை இலங்கையிடம் இருக்கவில்லை. (2011-ம் ஆண்டுவரை இந்தியாவிடமும் இல்லை)

2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி அதிகாலை புறப்பட்ட இரு விமானங்களும், சூரியன் உதிப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் கிளிநொச்சிக்கு மேல் உள்ள வான் பகுதிக்கு வந்தன. இந்த விமானங்கள் வானில் வட்டமடிக்க முடியாது. காரணம், வட்டமடிக்கும் நேரத்தில் கீழே இவர்களால் இலக்கு வைக்கப்பட்டவர்கள், உஷாராகி விடுவார்கள். இடம் மாறி விடுவார்கள்.

அதாவது விமானங்கள் கிளிநொச்சி வான் பகுதிக்கு வந்தவுடன் சரியாக ‘இலக்கு’ மேல் விமானத்தை பொசிஷன் பண்ணி விமானத்தில் உள்ள குண்டுகளை கீழே விழுத்த வேண்டும். இதை நாம் எழுதும்போது சுலபமான காரியமாக தெரியும்.

ஆனால், 30,000 அடி உயரத்தில் இது அப்படியொன்றும் சுலபமான காரியமல்ல.

இருள் விலகாத நேரத்தில் அந்த இரு விமானங்களில் ஒன்று குறிப்பிட்ட ஒரு பொசிஷனுக்கு வந்தபோது, விமானத்தில் இருந்த குண்டை கீழே விழ வைத்துவிட்டு விலகினார் விமானி. அடுத்த சில விநாடிகளில் இரண்டாவது விமானமும் சரியாக அதே பொசிஷனுக்கு வந்த தனது விமானத்தில் இருந்த குண்டை ரிலீஸ் செய்தது.

உடனடியாகவே இரு விமானங்களும் கிளிநொச்சியை விட்டு விலகிப் பறந்து கட்டுநாயக விமான தளத்துக்கு சென்றுவிட்டன.

இரு விமானங்களிலும் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட மொத்தம் 4 டன் (4,000 கிலோ) எடையுள்ள குண்டுகள், நேரே 90 டிகிரியில் தரையில் இருந்த காங்க்ரீட் பங்கரின் (பதுங்கு குழி) மேல் பகுதியில் விழுந்தன. அந்த பங்கருக்கு உள்ளேயிருந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது உதவியாளர்கள், பாதுகாவலர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இது நேட்டோ படைகள் ஈராக்கில் நடத்திய பங்கர் பஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் துல்லிய கணிப்பீடு. காங்க்ரீட் பங்கரை உடைத்து தரைமட்டமாக்க சுமார் 5000 முதல் 6500 கிலோ வரையான குண்டின் நேரடி உதைப்பு (90 டிகிரி) தேவை. ஆனால், 3,500 கிலோ உதைப்புடன், பங்கருக்கு உள்ளே இருப்பவர்களை உயிரிழக்க வைக்க முடியும் (அதிர்வு காரணமாக). உயிரிழப்பவர்களின் உடல்கள் சிதறாது. வாய், மற்றும் கண்களில் ரத்த கசிவு மட்டும் ஏற்படும்.

பங்கருக்குள் உயிரிழந்தவர் யார் என்பதை முகத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்ள நேட்டோ படைகள் பயன்படுத்திய உத்தி இது.

தமிழ்செல்வன் இருந்த பங்கரில் ஒவ்வொன்றாக வந்து, சரியான கோணத்தில் விழுந்தன அந்த குண்டுகள். அருகில் உள்ள பில்டிங்குகளில் சேதம் ஏதுமில்லை. அந்தளவுக்கு துல்லியமான தாக்குதல். (கிளிநொச்சியில் தமிழ்செல்வன் உயிரிழந்த அந்த பங்கரை, இப்போதும் ராணுவ அனுமதி பெற்று சென்று பார்க்கலாம்)

இதை நடத்தியது வெளிநாட்டு விமானங்களோ, வெளிநாட்டு விமானிகளோ அல்ல. இலங்கை விமானப்படை விமானங்களும், விமானிகளும்தான்.

ஆனால், precision target bombing தொழில்நுட்ப உதவி மட்டும் மேலைநாட்டு உளவுத்துறை கைங்கார்யம்.

அதிகாலை கொல்லப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, விடுதலைப் புலிகளின் தளபதிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பியிருந்த தமிழ்செல்வன், தமது இடத்துக்கு வந்ததும், போன் அழைப்பு ஒன்றை மட்டும் செய்திருந்தார். அது, வெளிநாடு ஒன்றுக்கு செய்யப்பட்ட போன் கால்.

அதுவே போதும் மேலை நாட்டு உளவுத்துறையினருக்கு!

யுத்தத்தின் இறுதி நாட்களில், கொழும்புவில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டம் ஏதும் பலிக்காமல் இருக்க வெளியேயிருந்து மேலைநாட்டு உளவுத்துறை உதவி செய்ய, ‘ஆர்மி அங்கிள்’ வரை கைதானார்கள்.

ஐயாவும், ஆர்மி அங்கிளும் சேர்ந்து, ஜனாதிபதி ராஜபக்ஷே ஜோர்தான் பயணத்துக்காக கொழும்பு ஏர்போர்ட் போகும் வழியில் தற்கொலை தாக்குதலில் கொல்லும் திட்டத்தையே, கடைசி நேரத்தில் புலிகளின் தலைமை பெரிதும் நம்பியிருந்தது என்பது, ஐயாவை விசாரித்தபோது தெரியவந்தது.

வன்னியில் இருந்து அவருக்கு வந்த உத்தரவில், “இந்த தாக்குதல் எப்படியும் வெற்றிகரமாக நடந்தேயாக வேண்டும். இதில் உன் (ஐயா) உயிர் போனால்கூட முடித்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வன்னியில் தலைமையே அழிந்து போகலாம்” என கூறப்பட்டதாக விசாரணையின்போது ஐயா தெரிவித்தார்.

இந்த தாக்குதலை எப்படியும் சரியாக நடத்த வேண்டும் என புலிகள் வலியுறுத்தியதன் காரணம், ஜனாதிபதி ராஜபக்ஷவை கொல்லும் மற்றொரு தற்கொலை தாக்குதல் திட்டத்தை, அதற்கு 3 மாதங்களுக்கு முன் இதே ஐயா – ஆர்மி அங்கிள் டீம் கோட்டை விட்டிருந்தது.

அது நடந்தது, 2009-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4-ம் தேதி.

அன்றைய தினம், கொழும்புவில் BMICH எனப்படும் பண்டாரநாயகே சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ‘தெயத கிருள’ (அர்த்தம் – தேசத்தின் மகுடம்) கண்காட்சி ஆரம்பமாக இருந்தது. அதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷே வருகை தந்தார்.

இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்த அன்று ஏற்பாடு செய்திருந்தார்கள் அய்யாவும், ஆர்மி அங்கிளும்.

முதலாவது மனித வெடிகுண்டு, கண்காட்சி மண்டபத்தில் வெடிக்க தயாராக சென்றார். அதில் ஜனாதிபதி சிக்கியதும், உடனே அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்வார்கள் என்பதால், மண்டபத்தில் இருந்து வைத்தியசாலை செல்லும் வீதியில், மற்றொரு மனித வெடிகுண்டு வெடிப்பதற்கு தயாராக இருப்பார் என்பதே திட்டம்.

முதலாவது மனித வெடிகுண்டு, இலங்கை ராணுவ சீருடையில், ஆர்மி அங்கிளின் ராணுவ ஜீப்பில் இருந்தார்.

அவரை அப்படியே BMICH காம்பவுண்டுக்குள் கொண்டுபோய் விடலாம் என ஆர்மி அங்கிள் நினைத்திருக்க, அந்த ஜீப் கேட்டில் நிறுத்தப்பட்டது.

அன்றையதினம் ராணுவத்தில் பிரிகேடியர் பதவி தரம் மற்றும் அதைவிட உயர்ந்த பதவித் தரத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமே தமது வாகனங்களில் காம்பவுண்டுக்குள் செல்ல முடியும் என உத்தரவு வந்திருந்தது. ஆனால், ஆர்மி அங்கிள், லெப்டினென்ட் கர்னல் தர அதிகாரி என்பதால், அன்றைய தாக்குதல் நடக்கவில்லை. (தொடரும்…)

Sunday, July 27, 2014

ஆட்கடத்தும் செய்தியை எதிர்த்தல் / Operation Sovereign Borders

கப்பல் மூலம் ஆட்களைக் கடத்திவருவதனை முறியடிக்கவும், ஆஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவும் என்றுமில்லாதவாறு மிகவும் கடுமையான கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் நிறைவேற்றிவருகிறது.

Operation Sovereign Borders (OSB) என்பது வள்ளங்களை நிறுத்தவும், குற்றவாளிகளின் கைகளிலே தமது உயிர்களை கடலிலே பணயம் வைப்பதனைத் தடுக்கவும் அத்துடன் ஆஸ்திரேலியாவின் நேர்மையான குடிவரவு திட்டத்தினைப் பாதுகாப்பதற்குமான ஒரு இராணுவமுனைப்புடனான கரையோர பாதுகாப்பு முன்னேற்பாடாகும்.

வீசா இல்லாமல் படகில் பயணிக்கும் புகலிடம் கோருவோர் ஆஸ்திரேலியாவைச் சென்றடையார். குடும்பத்தோர், சிறுவர்கள், துணையின்றி தாமாகவரும் சிறுவர்கள், படித்தவர்கள், தேர்ச்சிபெற்ற தொழிலாளர் போன்ற எல்லோருக்குமே இந்த விதிகள் பொதுவானவை. விதிவிலக்குகள் கிடையாது.

ஆஸ்திரேலியா அதனுடைய எல்லைகளைப் பாதுகாப்பதில் மிகவும் கடுமையாக உள்ளது என்பதுடன் சட்டவிரோதமாக படகிலே வர முயற்சிப்பவர்களைத் தடுத்துநிறுத்தும்.

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் பயணம் செய்ய ஆலோசனை செய்பவர்களுக்கு, சட்டங்கள் மாறிவிட்டன; ஆட்கடத்துவோரின் பொய்களை நம்பவேண்டாம்; அத்துடன் ஆஸ்திரேலியாவை தமது வாழ்விடமாக்க வழிகிடையாதென தெரிவிப்பதற்காக அதிகமான பல கரைகடந்த செய்திஅறிவித்தல் நடவடிக்கைகளை OSB Joint Agency Taskforce மேற்கொண்டுவருகிறது.

விதிகள் மாறியிருக்கின்றன. உண்மைகளைச் சோதித்தறியுங்கள்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் கடல் வழியான ஆட்கடத்தலுக்கு எதிராகப் போராடவும் அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவும் எப்போதையும் விடக் கடினமான எல்லைப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. படகு மூலம் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவில் நுழைய முயலும் எவரும் ஒருபோதும் அவுஸ்திரேலியாவைத் தமது வாழிடமாக்க மாட்டார்.

Operation Sovereign Boarders (இறைமையுள்ள எல்லைகள் நடவடிக்கை) என்பதன் கீழ், சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் எந்தவொரு கலத்தையும் வழி மறித்து எமது நீர் எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பாக அகற்றுவது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கையும் செயற்பாடுமாகும்.

விசா ஒன்றில்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டோர் அவுஸ்திரேலியாவில் அதனை முடிவாக்க மாட்டர்; அவர்கள் செயற்படுத்தலுக்காக நாவுருவுக்கோ பப்புவா நியூகினிக்கோ அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களால் வேலை செய்ய இயலாதிருக்கும் என்பதுடன் தமது கோரிக்கை செயற்படுத்தப்படும் வரை நீண்ட காலம் காத்திரக்கலாம்.

அவுஸ்திரேலியா எப்போதையும் விட ஆகக் கடினமான எல்லைப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது. விசா ஒன்றில்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரும் எவருக்கும் மறு அறிவித்தல் வரை தற்காலிக அல்லது நிரந்தரப் பாதுகாப்பு விசாக்கள் வழங்கப்பட மாட்டா என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

விதிகள் குடும்பங்கள், சிறுவர், துணையற்ற சிறுவர், கற்றோர், திறமைசாலிகள் என எல்லோருக்கும் பொருந்தும். விதிவிலக்குகள் இல்லை..

உங்களது பணத்தை வீணாக்காதீர்கள் - ஆட்கடத்தற்காரர்கள் பொய்யுரைக்கின்றனர்
ஆட்கடத்தற்காரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதன் மூலம் உங்களது குடும்பத்தினரதும் நண்பர்களினதும் பாதுகாப்பை இடருக்கு உள்ளாக்காதீர்கள். விசா ஒன்றில்லாமல் படகு மூலம் பயணம் செய்வது அவர்கள் இங்கே அவுஸ்திரேலியாவிற் குடிமர்த்தப்பட மாட்டார்களென்பதை உறுதிப்படுத்தும்.

அவர்கள் அகதிகளென ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் அவுஸ்திரேலியாவிற் குடியமர்த்தப்பட மாட்டர்.

ஆட்கடத்தற்காரர்களை நிறுத்தவும் கடலில் மேலும் உயிர்கள் இழக்கப்படுவதை நிறுத்தவுமே இந்நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.படுத்தப்பட்டுள்ளன.

உங்களது குடும்பத்தையும் நண்பர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் - சரியான வழியில் வருமாறு அவர்களுக்குக் கூறுங்கள்
சட்டப்படியான புலம் பெயர்வு மூலம் நீங்கள் இன்னமும் அவுஸ்திரேலியாவுக்கு வரலாம். புகலிடக் கோரிக்கையாளர்கள் மனிதாபிமான, திறமையான வேலையாள் அல்லது குடும்பப் புலம் பெயர்வுத் திட்டங்கள் மூலம் புலம் பெயர்வதாயின், அவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியிருப்புக்காக இன்னமும் செயற்படுத்தப்படுகின்றனர்.

தமது குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு வர அனுசரணை வழங்கும் போது, அவுஸ்திரேலியாவுக்கு சட்டப்படி புலம் பெயரும் ஆட்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது.

விசா ஒன்றைக் கண்டு கொள்ளுங்கள்
உங்களுக்கும் உங்களது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் சரியான விசாக்கள் எவையெனக் கண்டு கொள்ளுங்கள்http://www.customs.gov.au/site/Translations/tamil-o.asp



Monday, June 16, 2014

புலிகளின் தலைவர் பிரபாகரனின், மெய்ப்பாதுகாவலர் தேவிகனின் முடிவின் பின்னணி என்ன??: தேவிகன், அப்பன், கோபி மூவர் தலைமையிலான “புதிய புலிகள்” சிறிலங்காவினால் முறியடிக்கப்பட்டது எப்படி??

ஒரு புதிய தகவல் வவுனியாவிலிருந்து கிளம்பியது. காவலில் உள்ள நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, வவுனியா சிறிமா நகரிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது.

தாய். தந்தை மற்றும் ஆறு மற்றும் நான்கு வயதுள்ள இரண்டு பிள்ளைகள் ஆகிய நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று அங்கிருந்து கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது. பெற்றோர்கள் இருவரும் கிழக்கு பிராந்திய தமிழர்கள் வவுனியாவில் வசித்து வந்தவர்கள் மற்றும் கிட்டத்தட்ட அந்தப் பகுதிக்கு அந்நியர்களாக இருந்தார்கள்.

அந்த பிள்ளைகள் இரண்டையும் விட்டு வர வேறு யாரும் இல்லாததால் அவர்களும் அழைத்து வரப்பட்டார்கள். பின்னர் அவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டார்கள்.
கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள். அவர்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலையைச் சேர்ந்தவர்கள், வவுனியாவில் வாடகைவீட்டில் வசித்து வந்தார்கள்.

அந்த ஆண் சித்தி என்கிற வீரசிங்கம் லோகநாதன், அவரது மனைவி மகேஸ்வரி லோகநாதன். அந்த சுற்றாடலின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வவுனியா பிரதேசத்தின் திருநாவற்காடு என்றழைக்கப்படும் இடத்தில் உள்ள சிறு காணித்துண்டு ஒன்றை அவர்கள் தங்கள் பெயரில் வாங்கியிருந்தார்கள்.

அந்த இடத்தில் ஒரு வீடு கட்டுவதற்கான திட்டமும் முன்னெடுக்கப் பட்டிருந்தது.

லோகநாதன் தம்பதியினர் விசாரணையாளர்களிடம் தெரிவித்தது, போர் முடிவடைந்த பின்னர் தாங்கள் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வந்ததாகவும். ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் தனிப்பட்ட முறையில் ஆயித்திய மலைக்கு வந்து அவர்களுடன் தொடர்பு கொண்டதாகவும், மற்றும் அவர் தங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியபோது அதைத் தங்களால் தட்ட முடியவில்லை என்று.

அதன் விளைவாக அவர்கள் கிழக்கிலிருந்து வடக்குக்கு இடம்பெயர்ந்து வவுனியாவில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தர்கள். வாடகை மற்றும் வீட்டுச்செலவினங்களுக்காக அவர்களக்கு மாதாந்தம் 50,000 ரூபா சுவிட்சலாந்தில் உள்ள சந்தோசம் மாஸ்ரர் என்பவரால் வழங்கப்பட்டு வந்தது.

திருநாவற்காட்டில் ஒரு காணித்துண்டும் அவர்களின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டது. அதில் ஒரு வீடு கட்டி அது தயாரானதும் அங்கு செல்ல எண்ணியிருந்தார்கள். வீட்டிற்கான கட்டிடச் செலவையும் சந்தோசம் மாஸ்ரரே ஏற்றிருந்தார், ஆனால் இந்த கட்டிட வேலைகளை லோகநாதன் மேற்பார்வை செய்யவேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டிருந்தது.

அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு அண்மித்ததாகவே அந்த இடம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதன் வெளிப்படையான திட்டம் என்னவென்றால் செயற்பாட்டாளர்களுக்கு மறைந்திருப்பதற்கு வசதியாக அந்த வீட்டை ஒரு மறைவான பதுங்குமிடமாக பயன்படுத்துவதுதான். ஆயுதங்களையும் அருகிலுள்ள காட்டில் மறைத்து வைக்கலாம்.

தேவிகன்
index6

சித்தி என்கிற லோகநாதனிடமிருந்து பெறப்பட்ட மிகவும் பெறுமதியான தகவல் என்னவென்றால், அவர்களை நியமித்த மனிதரைப் பற்றிய அடையாளங்கள்தான். லோகநாதன் குடும்பத்தை வவுனியாவுக்கு இடம் பெயர வைத்த மனிதரான தேவிகன்தான், எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியின் சூத்திரதாரி என்பது தெரிந்தது.

விசாரணைகளில் வெளிவந்த தேவிகன் எனும் பெயர் புலனாய்வாளர்களின் மத்தியில் ஒரு எண்ணத்தை கிளறி விட்டது. அந்தப் பெயர் நன்கு அறிமுகமானதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் நீண்ட காலமாக அவரை தேடி வருவதையும் நினைவுகூர முடிந்தது.

தேவிகனின் உண்மைப் பெயர் சுந்தரலிங்கம் கஜதீபன். தேவிகன் 1979 மே 23ல் பிறந்தவர். அவர் யாழ்ப்பாண மாவட்டம், தென்மராட்சிப் பிரிவு, மந்துவிலைச் சேர்;தவர். 1995ல் அவர் தன்னிச்சையாகவே எல்.ரீ.ரீ.ஈயில் சேர்ந்தார். அவரது பல இயக்கப் பெயர்கள் மற்றும் புனைபெயர்கள் தேவிகள், தெய்வன், vநவநீதன், வல்லன், தேவன் என்பனவாகும்.

அவர், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனுக்கும், அவரது மனைவி மதிவதனிக்கும் நீண்ட காலம் மெயப்பாதுகாவலராகக் கடமை புரிந்துள்ளார். மேலும் அவர் விமானம் ஓட்டும் உரிமம் ஒன்றைப் பெற்றிருப்பதனால் எல்.ரீ.ரீ.ஈயின் வான்படைப் பிரிவான வான்புலிகளின் விமானத் தாக்குதல்களில் பங்கெடுத்துள்ளார்.

யுத்த காலத்தில் கொலன்னாவ – கெரவலப்பிட்டிய, சாலியபுர,  அனுராதபுர ஆகிய வான் தாக்குதல்களில் தேவிகன் தொடர்பு பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. தேவிகன் ஒரு தற்கொலைப் போராளியும் ஆவார், அவர் கரும்புலிகளின் சத்தியப் பிரமாணமும் எடுத்துள்ளார். அவர் எல்.ரீ.ரீ.ஈயின் உளவுப் பிரிவு, இராணுவ உளவுப் பிரிவு, உயரடுக்கு ராதா படையணி என்பனவற்றில் கடமையாற்றியுள்ளார். அவர் புதிய அங்கத்தவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஒரு பயிற்சியாளரும் கூட.

மே 2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னர், தேவிகன் மன்னாரிலிருந்து இரகசியமாக இந்தியாவுக்குச் சென்றார். நோர்வேயிலிருந்த நெடியவனுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் தென்கிழக்காசியாவுக்குச் சென்றார். அதன்பின் அவர் ஐரோப்பாவுக்குச் சென்று அங்கு பல நாடுகள் இடையே சுற்றிவந்தார்.

பின்னர் அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்தார், அங்கு நெடியவன் குழுவினரால் மேற்கொள்ளப்படும் இந்திய, ஸ்ரீலங்கா செயற்பாடுகளுக்கு அவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எனினும் தேவிகன், விநாயகம் குழுவினருடனும் ஒரு சுமுக உறவை பேணி வந்தார்.

தேவிகன் ஒரு போலிக் கடவுச்சீட்டு மூலமாகவோ அல்லது இரகசியமான நாட்டுப் படகுகள் வழியாகவோ இந்தியாவக்கும் மற்றும் ஸ்ரீலங்காவுக்கும் இடையில் பல முறை சென்று திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார் என நம்பப்படுகிறது.


நழுவித் தப்புகிற நபர்…

புலனாய்வு அறிக்கைகள்  ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவில் நெடியவன் பிரிவினரின் செயல்பாடுகளுக்கு தேவிகன் பொறுப்பாக உள்ளார் எனத் தெரிவிப்பதால், ஸ்ரீலங்கா அதிகாரிகள் தீவில் அவரது வருகையை எதிர்பார்த்து எச்சரிக்கையாக இருந்தார்கள். எனினும் தான் நழுவித் தப்பும் நபர் என்பதை பலமுறை தேவிகன் நிரூபித்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழும் அவரது சகோதரர் திருமணம் செய்வதற்காக இந்த வருட ஆரம்பத்தில் ஸ்ரீலங்காவுக்கு வந்திருந்தார். அந்த திருமணத்துக்கு தேவிகன் வரலாம் என எதிர்பார்த்து பாதுகாப்பு அதிகாரிகள் திருமணத்தை நெருக்கமாக கண்காணித்து வந்தனர் ஆனால் அந்த சகோதரன் மகிழ்ச்சியான அந்த வைபவத்தை தவிர்த்துக கொண்டார்.

இந்தப் பின்னணியில் ஸ்ரீலங்கா விசாரணையாளர்களுக்கு நிஜமாகவே லோகநாதன் உண்மையைத்தான் சொல்கிறாரா என்கிற சந்தேகம் இருந்துகொண்டே வந்தது. விழிப்புடன் இருந்துவரும் தேவிகன் ஸ்ரீலங்காவை சுற்றிவரும் ஆபத்தான ஒரு முயற்சியில் ஈடுபடுவாரா என அதிகாரிகள் பெரிதும் சந்தேகித்தார்கள்.

தவிரவும் கட்டுநாயக்காவில் அவரது வரவைப் பற்றிய பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. உண்மையிலேயே தேவிகன், ஸ்ரீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பறப்பவராக இருந்தால், அதன் அர்த்தம் அவர் பொய்யான அடையாளத்தை அல்லது கள்ளத்தோணியை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதாகும். ஆயினும் புகைப்படங்களைக் காண்பித்தபோது லோகநாதனும் மகேஸ்வரியும் அது தேவிகன்தான் என்பதில் பிடிவாதமான உறுதியுடன் தெரிவித்தனர்.

இதன்படி சிலசமயங்களில் தேவியன் என பிழையாக எழுதப்படும் தேவிகனின் பெயரும் வேண்டப்படுபவர்கள் பற்றிய சுவரொட்டிகளில் சேர்க்கப்பட்டது. வான் புலிகளின் சீருடையில் உள்ள ஒரு மனிதரின் புகைப்படமும் அதில் காட்சிக்கு விடப்பட்டது. அவர் வடக்குக்கும் மற்றும் கிழக்குக்கு இடையே நகர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

இப்போது ஒரு தொகையான வேண்டப்படுவர்கள் பற்றிய சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் அப்பன் மற்றும் கோபி பற்றியும் மற்றொரு தொகையானவற்றில் தேவிகன் பற்றியும் குறிப்பிட வேண்டியதாகி விட்டது. விரைவிலேயே அதிகாரிகள் தேவிகன் பற்றிய புதிய தகவல்களைப் பெற ஆரம்பித்தனர்.

அதில் ஒரு தகவல், வவுனியா கூமன்குளத்தில் உள்ள வீடு ஒன்று மறைவிடமாக பயன்படுத்துவதற்காக கடந்த வருடம் தேவிகனால் கொள்முதல் செய்யப்பட்டது என்பதாகும். அந்த வீடு பன்னிரண்டரை லட்சம் ரூபாவுக்கு பத்மாவதி மகாலிங்கம் என்கிற 64 வயதுடைய பூனகரியை சேர்ந்த ஒரு விதவையின் பெயரில் வாங்கப்பட்டிருந்தது.

34 வயதுடைய தேவிகன் மற்றும் 25 வயதுடைய இளம் பெண்ணாண சசிகலா என்கிற வத்சலா சகாதேவன் ஆகியோர் பத்மாவதியின் பிள்ளைகளாக தெரிவிக்கப் பட்டிருந்தனர். அவர்கள் ஒரு குடும்பம் போல நடித்து அந்த வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

சிறைக்காவல்…

இப்போது பத்மாவதி மகாலிங்கம் சிறைக்காவலில் உள்ள அதேவேளை, சசிகலா என்கிற பொய்ப் பெயரை பயன்படுத்தி வந்த அந்த இளம்பெண் நவம்பர் 2013ல் இந்தியாவுக்கு சென்றுள்ளார். அவள் கட்டுநாயக்காவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றுள்ளாள் என்று விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு வந்தாறுமூலையை சேர்ந்த சசிகலாவின் உண்மைப் பெயர் வத்சலா சகாதேவன். அவள் 1988 ஒக்ரோபர் 23ல் பிறந்தவள். வத்சலா என்கிற சசிகலா ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.

புலனாய்வாளர்களுக்கு கிடைத்த மற்றொரு தகவலில் தேவிகனுக்கு வவுனியா பேரூந்து நிலையம் அருகில் வியாபார நிலையம் ஒன்று இருப்பதாகவும் அவன் அதை தனது மறைவான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாகவும் தெரிய வந்தது. இது பிரதானமாக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் என்பனவற்றை விற்பனை செய்யும் ஒரு இடமாகும்.


அந்த நிறுவனத்தின் பெயர் “டாட்டா ஸ்போட்ஸ் கோர்னர்” என்பதாகும், அங்கு கணணி மற்றும் போட்டோ பிரதி சேவைகளும் வழங்கப்பட்டு வந்தன. தொலைபேசி அழைப்பு அட்டைகளும் அங்கு விற்கப்பட்டு வந்தன.

தெய்வன் எனும் பெயரை இங்கு பயன்படுத்தி வந்த தேவிகன் வழக்கமாக அடிக்கடி “டாட்டா ஸ்போட்ஸ் கோர்னருக்கு” சென்று அங்கிருந்து தொலைபேசி மற்றும் கணணி மூலமாக தொடர்பாடல்களை நடத்தி வந்தார். அவர் அங்கு மக்களையும் சந்தித்து வந்தார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் திலீபன் என்கிற ஆசிரியர் “டாட்டா ஸ்போட்ஸ் கோர்னரின்” உரிமையாளராக இருந்து அதை நடத்தி வந்தார். அவர் 2005ல் வவுனியாவுக்கு வந்து வவுனியாவில் உள்ள பல்வேறு பாடசாலைகளிலும் கடந்த வருடங்களில் கல்வி கற்பித்து வந்தார்.

அவர் இந்த விளையாட்டு உபகரணக் கடையை ஆரம்பித்தது, ஒரு பக்க வருமான மார்க்கத்துக்காக மற்றும்  தான் ஆசிரியராக இருப்பதால் தனது செல்வாக்கை பயன்படுத்தி  பாடசாலை பிள்ளைகளுக்கு உற்பத்திகளை விற்கலாம் என்பதும் அதன் நோக்கத்தில் ஒன்று.

தேவிகனால் தான் ஒரு மறைப்பாக பயன்படுத்தப் படுகிறோம் என்பது வெளிப்படையாகவே திலீபனுக்கு நன்கு தெரியும், அதனால் அவரைக் கைது செய்வதற்கு முன்பாகவே அவர் ஓடி விட்டார்.

அவர் இந்த நாட்டை விட்டு இந்தியாவுக்கு  இந்த வருடம் ஏப்ரல் 5ல் விமானம் மூலம் சென்றுள்ளார். அந்த வியாபார நிலையம் இப்போது மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அயராது  விசாரணைகளை மேற்கொண்ட விசாரணையாளர்கள்  தௌளத்தெளிவாக கண்டு பிடித்தது, “எல்.ரீ.ரீ.ஈயினை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மனிதர்களில் இந்த முழு நடவடிக்கைக்கும் பின்னால் இருந்து இயக்கிய சக்தி வாய்ந்த இயந்திரம் அப்பனோ அல்லது கோபியோ இல்லை ஆனால் அது தேவிகன்தான் என்கிற உண்மையை”.

புதிய எல்.ரீ.ரீ.ஈ அதன் உருவாக்க கட்டங்களில் ஒரு மூவரணியை அதன் தலைவராக கொண்டிருந்தது.

கோபி உளவுப் பிரிவுக்கு பொறுப்பாகவும் மற்றும் அப்பன் பிரச்சாரங்களுக்கு பொறுப்பாகவும் இருந்துள்ளார். தேவிகன் தாக்குதல் அல்லது செயல்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்துள்ளார்.

தேவிகன் எல்.ரீ.ரீ.ஈயினை புதுப்பிக்கும் நடவடிக்கைகளின் ஒட்டு மொத்தத்துக்கும் பொறுப்பாக இருந்திருக்கிறார். விரைவாகவே இந்த மூவரும் தேவைப் படுகிறார்கள் என்பதை கூறும் துண்டுப் பிரசுரங்கள் வெளியாகின. 42,000 துண்டுப் பிரசுரங்கள் வடக்கு முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.

வெடிவைத்தகல்லு…

இதன் விளைவாக வடக்கிலுள்ள சாதாரண மக்களிடம் இருந்து இன்னும் அதிகமான தகவல்கள் வெளிவந்தன. கிடைத்த துப்புக்கள் யாவும் பின்பற்றப்பட்டு சரிபார்க்கப்பட்டன.

வட பகுதி வவுனியாவில் உள்ள வெடிவைத்தகல்லு பகுதியில்  இருந்து   ஒரு சாதகமான துப்பு கிடைக்கப் பெற்றது. மரம் வெட்டும் தொழிலாளர்கள், அடர்ந்த காட்டுக்குள் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலரது நடமாட்டங்களைக் கண்டார்கள் என்று கூறப்பட்டது.

ஒரு பெரிய காட்டுப்பாதை, வெடிவைத்தகல்லிருந்து ஊத்துக்குளம் ஊடாக போகஸ்வெ வரை நீட்டிக்கப்பட்டது. காட்டின் ஒரு முனை வவுனியா மாவட்டம் வெடிவைத்தகல்லு பகுதியில் இருந்த அதேவேளை அதன் மறுமுனை அனுராதபுரம் பகுதியில் உள்ள பதவிய பகுதியில் இருந்தது.

தேடப்படும் புலிகளின் மூவர்கள் காட்சியளித்ததாக கூறப்பட்ட காடு, சுமார் 12 – 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது.

ஏப்ரல் 10 -11 ந்திகதி நள்ளிரவில்  ஒரு பிரமாண்டமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் விளைவாக  தேவிகன்- அப்பன்- கோபி என்கிற மூவரும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் இராணுவ வீரர்களால் கொல்லப்பட்டார்கள்.



2009 பெப்ரவரியில் ராதா படையணி தலைவர் ரட்னம் மாஸ்ரரினால் முல்லைத்தீவு மாவட்டம் காரைதுறைப்பற்றில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் கடற்பகுதிக்கு இடம்பெயரும்படி தேவிகனிடம் கேட்கப்பட்டது. அவர் நெடுங்கேணி  காட்டிற்கு எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் சம்மதத்தோடு ஒரு இரகசிய நடவடிக்கைக்காக அனுப்பப் பட்டிருந்தார்.

அந்த நடவடிக்கை எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நெடுங்கேணி காட்டிற்குள் இருக்கும் ஒரு மறைவான தளத்திற்கு இரகசியமாக இடம் பெயர்த்துவது தான். அங்கிருந்து புலித் தலைவரை கிழக்கிற்கு நகர்த்தி தேவைப்பட்டால் வெளிநாட்டுக்கும் கொண்டு போவதுதான் இந்த திட்டம்.

கையிருப்பிலிருந்த திட்டங்களில் பிரபாகரனை, வான் வழியாக வெளியேற்றும் திட்டமும் அடங்கியிருந்தது. தேவிகன் ஒரு பயிற்சி பெற்ற விமானியும் மற்றும் நம்பிக்கையான ஒரு லெப்ரினன் ஆகவும் இருந்ததால் இந்தப்பணிக்கான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது வெளிப்படை.

அத்தகைய ஒரு சம்பவம் ஒருபோதும் நடக்கவில்லை. படைத் தரப்பில் போடப்பட்டிருந்த வளையத்தை ஊடுருவி தனது பாதுகாப்புக்காக கண்டுபிடித்து இப்போது அடைபட்டுக் கிடக்கும் கரையோரத் துண்டின் காவலை உடைத்துக் கொண்டு வன்னி பெருநிலப் பரப்பை அடைவது சாத்தியமற்றது என்பதை பிரபாகரன் உணர்ந்தார்.

எல்.ரீ.ரீ.ஈயின் பெருந் தலைவரும் மற்றும் அவரது மூத்த தளபதிகளும் அங்கு கொல்லப்பட்டதை அனைவரும் நன்கு அறிவார்கள். தனது தலைவரின் வரவுக்காக நெடுங்கேணிக் காட்டில் தேவிகன் காத்திருந்தான். இந்தக் காலகட்டத்தில் தான் இந்தக் காட்டுப்பகுதியின் நிலபபரப்பை பற்றி அவன் நன்கு அறிந்து கொண்டான்.

அதனால்தான் ஐந்து வருடங்கள் கழித்தும் தனது தோழர்களான கோபி மற்றும் அப்பன் ஆகியோருடன் தஞ்சம் தேடி, தனக்குப் பழக்கமான காட்டுக்குள் அவன் வந்து சேர்ந்தான்.

கடைசியில் தனது இறுதி முடிவையும் தனது தோழர்களின் கரங்களுடன் இணைந்து தேடிக் கொண்டான்.

நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனை சார்ந்த…

எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் ஊட்டும் நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனை சார்ந்த இந்த முயற்சி இப்படியாக முடிவடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் இது தொடர்பாக தளர்வான முனைகள் இன்னமும் எங்காவது இருக்கிறதா? என்று தேடி அழிக்கும் முயற்சியில் இன்னமும் ஈடுபட்டு வருகிறார்கள்.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். எனினும் எதிர்காலத்தில் கைதானவர்களில் 20 – 25 பேர்கள்மீது வழக்கு தொடரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள்.

மூவரணி புலிகளின் உயிரை எடுத்து முடிவடைந்த இறுதிக்கட்ட நடவடிக்கையில் பங்கேற்ற, எட்டு இராணுவ அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் துருப்புக்கள் அடங்கிய குழுவை இராணுவ தளபதி விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

மற்றொரு முன்னேற்றமாக இந்த நடவடிக்கையின் போது தற்செயலாக விபத்தில் கொல்லப்பட்ட வீரரான செல்வராஜா கமலராஜா, மரணத்தின் பின்னர் லான்ஸ் கோப்ரலாக பதவி உயர்த்திக் கௌரவிக்கப்பட்டார். அவரது குடும்பத்துக்காக இராணுவம் அவரது சொந்த இடமான குருநாகலில் ஒரு வீட்டைக் கட்டி வருகிறது.

மற்றொரு விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் நாயகம் சுவரொட்டிகள் ஒட்டிய மனிதர்களை கண்டுபிடித்த பளை காவல் நிலைய காவல்துறையினரை மிகவும் புகழ்ந்துள்ளார்.

ஒரு வழக்கமான ரோந்து நடவடிக்கையின் போது காவலர்களின் இந்த கண்டுபிடிப்பும் அதைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் காரணமாகத் தான்  எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு தொடர்பான நிகழ்வைப் பற்றி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ய முடிந்தது.

வடக்கில் அளவுக்கு அதிகமான இராணுவ பிரசன்னம் இருந்த போதும் எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு முயற்சியை கண்டுபிடிப்பதற்கு வழக்கமான காவல்துறை ரோந்து நடவடிக்கை தான் வழியமைத்திருக்கிறது என்பது உண்மையில் விசித்திரமே.

இறுதியாக இந்த புத்துயிர்ப்பு முயற்சியை ஒரேயடியாக அடக்கப்பட்டதுக்கு காரணம் வடக்கில் உள்ள பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவல்களே அன்றி, அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னம் அல்ல. இந்தக் காட்சி சிந்தனைக்கு அதிக விருந்து படைக்கிறது.

வெளிநாட்டில் உள்ள புலிகள் மற்றும் புலிகள் சார்பு சக்திகள் மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள அவர்களது சகபயணிகள் ஆகியோர் ஒரு உணர்வை தூண்டிவிட முயன்ற போதிலும் அதற்கு மாறாக ஸ்ரீலங்காவில் உள்ள சரியான சிந்தனையுள்ள தமிழர்கள், எல்.ரீ.ரீ.ஈ திரும்ப வருவது என்றால் அதன் கருத்து பேரழிவு மற்றும் தற்பொழுதுள்ள பரிதாபகரமான நிலையிலிருந்து மீள் எழுச்சி பெற முயற்சிக்கும் ஆதரவற்ற சமூகத்திற்கு தண்டனை வழங்குவதைப் போன்றது என்பதை உணர்ந்துள்ளார்கள்.

இது ராஜபக்ஸ ஆட்சியில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக அல்லது அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாகாது.

அதன் உண்மையான அர்த்தம் மக்கள் கடந்த காலத்தில் கசப்பான பாடங்களைக் கற்றுள்ளதால், ஸ்ரீலங்காவில்; எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு எந்த வடிவத்தில் ஏற்பட்டாலும் அதை ஏற்கத் தயங்குகிறார்கள் என்பது தான்.
0002

மீள் எழுச்சி….

ஸ்ரீலங்காவில்; எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு முயற்சி ஒரு பிரச்சினை, அதற்காக இந்த எழுத்தாளர் சமீப காலங்களில் பல பத்திகளை அர்ப்பணித்துள்ளார். இத்தகைய எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பினால் ஏற்படும் விளைவுகள் நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும் குறிப்பாகத் தமிழர்களுக்கு பேரழிவாகவே இருக்கும் என்று நான் வலிமையாக உணர்கிறேன்.

ஆர்வமுள்ளவர்களின் தந்திரமான முயற்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம் இந்த விவகாரம் எனக்கூறி இதை தள்ளிவிடுபவர்களை பார்க்கும் போது உண்மையில் நெருடலாக இருக்கிறது.

இந்தப் பத்திகளில் நான் ஏற்கனவே சொல்லியிருப்பதைப் போல, எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு முயற்சி பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தால், என்ன நடந்திருக்க கூடும் என்பதை அநேகர் உணரவில்லை. புத்துயிர்ப்பு முயற்சி ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு திறமையாக நடுநிலையாக்கப் பட்டது உண்மையில் நாட்டின் அதிர்ஷ்டமே.

பல்வேறு நாடுகளிலுமுள்ள பல்வேறு வட்டாரங்களுடனும் இந்த முழு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் நோக்கத்துடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்ததால்,கடந்த சில வாரங்கள் உண்மையில் எனக்கு மிகவும் பரபரப்பான வாரங்களாக இருந்தன.

அந்த வட்டாரங்களில் பாதுகாப்பு தொடர்பானவர்கள், அறியப்பட்ட தமிழ் ஆர்வலர்கள், முன்னாள் போராளிகள், வன்னியில் உள்ள மக்கள், எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் குடும்ப அங்கத்தவர்கள், பயங்கரவாத கண்காணிப்பாளர்கள், மற்றும் உலகளாவிய நிறுவனங்களிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் என பல தரப்பட்வர்களும் இருந்தார்கள்.

அந்த தகவல்கள் முழுமையானதோ, அல்லது சுருக்கமானதோ என்பதில் அர்த்தம் எதுவுமில்லாவிட்டாலும், அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அந்த விவகாரம் பற்றிய நிகழ்வுகளைப் பற்றி ஓரளவுக்கு என்னால் ஒரு கட்டுரையை உருவாக்க முடிந்தது.

அந்தப் பின்னணியில் தான் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல் என்கிற விரிவான இந்தக் கட்டுரையை நான் எழுதியுள்ளேன்.

மார்ச் 29, 2014ல் டெய்லி மிரர் பத்திரிகையில் நான் முன்னர் எழுதிய கட்டுரையின் பந்தியை திரும்ப எழுதி இந்தக் கட்டுரையை நான் நிறைவு செய்ய விரும்புகிறேன். இந்த சாரம் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சிக்கு சமாதிகட்டும் மற்றொரு முயற்சியாக செயற்படலாம். இதோ அது:

“கடந்த சில வாரங்களாக ஸ்ரீலங்காவில் நடந்த  சில பரபரப்பான நிகழ்வுகள் விடுதலைப் புலிகள் தொடர்பான  மூன்று முக்கியமான உண்மைகளை பாதுகாப்பு முன்னணிகளிடையே உசுப்பி விட்டுள்ளது.

முதலாவது புலம் பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிகள் அல்லது புலிகள் சார்பு சக்திகள் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் வழங்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு ஸ்ரீலங்காவின் வாழ்க்கையை தொடர்ந்து குழப்ப முயல்வார்கள்.

இரண்டாவது  ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச தாக்கங்களைப் பொருட்படுத்தாமல் அத்தகைய சவால்களுக்குத் திறமையாகப் பதிலளிக்கும்.

மூன்றாவது நாட்டில் வலுவாக வேரூன்றி உள்ள பாதுகாப்பு அமைப்புகள், முன்னெடுக்கப்படும் எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு முயற்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதை நசுக்கும் திறனைக் கொண்டுள்ளன.

Monday, April 28, 2014

தமிழீழ விடுதலை புலிகளின் வெளிநாட்டு பிரிவினருக்கு எங்கே வரும் சிக்கல்?

 இலங்கை அரசு, பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக வெளிநாடுகளில் உள்ள 40 பேரின் பெயர்களை சர்வதேச போலீஸ் இன்டர்போலிடம் கொடுத்ததையடுத்து, அதில் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகளில் ஒன்றின் தலைவரான நெடியவன் எனப்படும் பேரின்நாயகம் சிவபரன் தொடர்பாக நார்வே அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடக்கின்றன.

இன்டர்போல் மூலம் ‘சிவப்பு எச்சரிக்கை’ வழங்கப்பட்டுள்ள 40 பேரில், முதல் கட்டமாக 8 பேர் தற்போது வசிக்கும் நாடுகளுடன், இலங்கை வெளியுறவு அமைச்சு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. அந்த 8 பேரில் நெடியவனும் ஒருவராக உள்ளார்.

நார்வே நாட்டு வெளியுறவுத்துறையின் உள்துறை விவகாரங்களை கவனிக்கும் செயலாளர் Morten Høglund, இலங்கை அரசின் கோரிக்கையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாக, நார்வே அரசு வானொலி NRK-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நார்வே வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பாக விசாரித்தபோது, நெடியவனின் பெயரில், இலங்கை போலீஸால் ‘சிவப்பு எச்சரிக்கை’ வழங்கப்பட்டுள்ள போதிலும், அவரது பெயர் இன்னமும் சர்வதேச போலீஸ் இன்டர்போலால் நார்வே அரசுக்கு அறிவிக்கப்படவில்லை. இன்டர்போல் நெடியவனின் பெயரை அறிவித்த பின்னரே, நார்வே அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

பொதுவாக ஒரு நாடு குறிப்பிட்ட நபர் ஒருவர் பற்றிய சிவப்பு எச்சரிக்கை கொடுத்த பின்னர், அந்த பெயர் இன்டர்போல் டேட்டாபேஸில் இடம்பெற சுமார் 90 நாட்கள் எடுக்கும். அதன்பின், அதில் குறிப்பிடப்பட்ட நபர் தற்போது தங்கியுள்ள நாட்டுக்கு, அந்த விபரங்களை இன்டர்போல் தெரியப்படுத்தும்.

நெடியவன் விஷயத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான அம்சமாக, அவர் ஏற்கனவே நார்வே போலீஸால் முன்பு கைது செய்யப்பட்ட சம்பவம் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு, நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த கேஸ் அது. நெதர்லாந்தில் வசிக்கும் தமிழர்களை மிரட்டி புலிகளுக்காக நிதி சேகரித்த சிலர் சிக்கியதுடன், சங்கிலித் தொடராக இவரும் சிக்கிக் கொண்டார்.

இதுபற்றி விறுவிறுப்பு.காமில் 3 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தோம். அப்போது இருந்த சூழ்நிலை வேறு, தற்போதைய சூழ்நிலை வேறு.  இப்போது இந்த விவகாரம் கழுத்தை இறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்த விவகாரம் என்ன?

நெதர்லாந்துப் பிரஜை ஒருவர், ராத்தர்டாம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். ஒரு நபர், தம்மை மிரட்டி பண வசூல் செய்கிறார் என்பதே புகார். அடுத்த சில தினங்களில், இதேபோல வேறு சில புகார்களும் நெதர்லாந்தில் வெவ்வேறு நகர போலீஸ் நிலையங்களில் பதிவாகின. இந்தப் புகார்கள் நெதர்லாந்து போலீஸ் இலாகாவுக்கு ‘தலைக்குள் மணியடிக்க’ வைத்தது!

இது ஒரு தனிப்பட்ட கொடுக்கல்-வாங்கல் அல்ல, ஒருவிதமான பணச் சேகரிப்பு என்பது அவர்களுக்குப் புரிந்தது. இவை சாதாரண பணப்பரிமாற்றங்கள் அல்ல என்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.

ஆனால், நெதர்லாந்து போலீஸ் யாரையும் கைது செய்யவில்லை. மிரட்டி பணம் சேகரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை, சுதந்திரமாக வெளியே திரிய விட்டார்கள். அவரது நடமாட்டங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டன. இது மாதக்கணக்கில் நடந்தது.

இந்தக் கண்காணிப்பு ஒருபக்கமாக நடந்து கொண்டிருக்க, தமது விசாரணையை வேறு கோணங்களில் தொடர்ந்தது நெதர்லாந்து போலீஸ். அந்த விசாரணைகளில், இந்தப் பணம் போய்ச் சேர்ந்த இடம், நெதர்லாந்துக்கு வெளியே மற்றொரு நாட்டில் உள்ள, விடுதலைப்புலிகள் இயக்க அலுவலகம் ஒன்றுக்கு என்ற விபரம் கிடைத்தது.

விடுதலைப்புலிகள் இயக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2006-ம் ஆண்டே பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டிருந்தது. நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளில் ஒன்று. இதனால், இந்தப் பணப் பரிமாற்றங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கான ‘நிதி சேகரிப்பு’ என்ற வகைக்குள் வந்தது.

விஷயம் ‘பெரியது’ என்று தெரிய வந்ததும் நெதர்லாந்து போலீஸ் இலாகா, இந்த விவகாரம் தமது சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டது. அதையடுத்து தாம் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் நெதர்லாந்து உளவுப்பிரிவு ஒன்றிடம் ஒப்படைத்தது போலீஸ் இலாகா.

மற்றைய நாடுகளைப் போலவே, நெதர்லாந்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட உளவுப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் நெதர்லாந்து தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான உளவுப் பிரிவின் கைகளிலேயே இந்த விபரங்கள் போய்ச் சேர்ந்தன. டச் மொழியில் Algemene Inlichtingen- en Veiligheidsdienst (AIVD) என்று அழைக்கப்படும் இந்த உளவுப்பிரிவின் தலைமையகம், Zoetermeer என்ற இடத்தில் உள்ளது.

AIVD, தமது பாணியில் மேலதிக விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கியது. நெதர்லாந்திலிருந்த சில போன் இலக்கங்கள் அவர்களது கண்காணிப்புக்குள் வந்தன. அந்தத் போன் இலக்கங்களுக்கு வந்த சில அழைப்புகளை அவர்கள் ஒட்டுக் கேட்டபோது, அதில் பேசப்பட்ட விஷயங்கள் அவர்களை ஆச்சரியப்பட வைத்தன.

அவர்கள், நெதர்லாந்தில் நடைபெறும் பணப் பரிமாற்றங்கள் பற்றி அவ்வளவாக பேசவில்லை. மாறாக, வெளிநாடுகளில் நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் பற்றிய கணக்குகள், நெதர்லாந்து தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்டன.

இது AIVDக்கு முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், போகப்போக, புரிந்து கொண்டார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட பண கணக்குகள் அளைத்தும், நெதர்லாந்திலுள்ள ஒரு நபருக்குத் தெரிவிக்கப்படுகிறது என்று புரிந்து போனது.

அந்த நபர்தான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச அளவில் பண கணக்குகளை கையாளும் நபராக (ஆடிட்டர் போல) இருக்கலாம் என ஊகித்து விட்டது, AIVD.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து பணம் பற்றிய கணக்குகள் மட்டுமே நெதர்லாந்துக்கு வருகின்றன, ஆனால், பணம் வருவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. மாறாக, நெதர்லாந்தில் சேகரிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி, நெதர்லாந்துக்கு வெளியே செல்வது தெரியவந்தது.

இதிலிருந்து, பணம் கணக்குப் பார்க்கப்படும் இடம்தான் நெதர்லாந்து என்றும், பணம் போய்ச்சேரும் இடம் நெதர்லாந்துக்கு வெளியே இருக்கிறது என்றும் ஊகித்தது உளவுத்துறை. அதையடுத்து, சில வெளிநாட்டு உளவுத்துறைகளிடமிருந்து புலிகளின் பண டீலிங்குகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொண்டது AIVD.

இந்த வகையில் AIVD தொடர்புகொண்ட வெளிநாட்டு உளவுத்துறைகளில் ஒன்று, ஜேர்மன் உளவுத்துறையான Bundesnachrichtendienst (BND)

அவர்களும் கிட்டத்தட்ட இதேபோன்ற தகவல் சேகரிப்பில் இருந்தது அப்போது தெரியவந்தது. நெதர்லாந்து உளவுத்துறையும், ஜேர்மன் உளவுத்துறையும் தத்தமது கையிலுள்ள தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொண்டனர். அப்போதுதான், முதன்முதலில் இந்த விவகாரத்துக்கு ஒரு முழு உருவம் கிடைக்கத் தொடங்கியது.
நெதர்லாந்து உளவுத்துறை, விடுதலைப்புலிகளை சுதந்திரமாக உலாவவிட்டு விபரங்களைச் சேகரித்ததுபோலச் செயற்படவில்லை ஜேர்மன் உளவுத்துறை.

அவர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

2010-ம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில், ஜேர்மன் உளவுப்பிரிவினர் ஜேர்மனியிலுள்ள இலங்கை தமிழர் தொடர்புள்ள மொத்தம் 8 இடங்களை ஒரே நேரத்தில் சுற்றி வளைத்தனர். இந்த 8 இடங்களில், ‘தமிழர் தொடர்பு மையம்’ ஒன்றின் அலுவலகமும் அடக்கம். இந்தச் சுற்றிவளைப்பில் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்றவர்கள் உட்பட, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜேர்மன் கைதுகளுடன், நெதர்லாந்தில் விஷயங்கள் கொஞ்சம் குழம்பிப் போயின. தங்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஆட்கள் உடனடியாகவே வெளித் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டதை AIVD கவனித்தது. இனியும் இவர்களை வெளியே விட்டு வைத்திருப்பதால், மேலதிக தகவல்கள் கிடைக்காது என்பதும் புரிந்து போனது.

இதன் பின்னரே, AIVD தனது வேட்டையைத் தொடங்கியது.

2011-ம் ஆண்டு ஏப்ரல் நான்காவது வாரம். நெதர்லாந்து உளவுத்துறை ஒரே நேரத்தில் இலங்கை தமிழர் தொடர்புள்ள மொத்தம் 16 இடங்களைச் சுற்றிவளைத்தது. இதில் 7 பேர் கைதாகினர். கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், டி.வி.டிக்கள், போட்டோக்கள் உட்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்கப் பணமாக 40,000 யூரோ எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில், விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரதான கணக்காளரும், நெதர்லாந்து தலைவரும் அடக்கம் என்று கூறப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் மகளிர் அமைப்பு, தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் நெதர்லாந்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டது.

இந்தக் கட்டத்தில், விவகாரம் நெதர்லாந்து நீதிமன்றத்துக்குச் சென்றது. பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தல் தொடர்பான வழக்கு பதிவாகியது.

வழக்கு ஒருபுறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க, AIVD இந்த விவகாரத்தில் மேலதிக உளவுத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது. காரணம், இந்தப் பணப்பரிமாற்றங்கள், ஒரு சர்வதேச நெட்வேர்க் ஆன செயல்பட்ட தகவல்கள் அவர்களிடம் கிடைத்திருந்தன.

அதேநேரத்தில் ஜேர்மனியில் BND, தமது விசாரணை வட்டத்துக்குள் இருந்தவர்களை விசாரித்து, இந்த நெட்வேர்க்கை புரிந்துகொள்ள முயன்று கொண்டிருந்தது.

premium-idஅவர்களது விசாரணையில் வித்தியாசமான தகவல் ஒன்று கிடைத்தது.

அது என்னவென்றால், ஜேர்மனியில் பணச் சேகரிப்புடன் தொடர்புடைய இலங்கை தமிழர் ஒருவர், யுத்தம் முடிந்தபின் தம்வசமிருந்த பணத்துடன் ஜேர்மனியை விட்டு வெளியேறி விட்டார் என்பது.

அவரை தேடிய ஜேர்மன் உளவுத்துறை, அவர் ஆபிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் நாட்டில், தன்னிடமுள்ள புலிகளின் பணத்துடன் செட்டிலாகி விட்டதைத் தெரிந்து கொண்டது.

இதையடுத்து உளவுத்துறை BND, மடகாஸ்கர் நாட்டின் வெளியுறவு அமைச்சுடன் தொடர்பு கொண்டு, அந்த நபரை மடகாஸ்கரில் இருந்து ஜெர்மனிக்கு நாடு கடத்த வைத்தார்கள். ஜேர்மன் பிரஜையான அவர் ஜெர்மனியின் டியூசல்டோஃப் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, அவரை கைது செய்து தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது BND.

நெதர்லாந்து உளவுத்துறையிடம் இந்த சர்வதேச வலையமைப்பு தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கத் தொடங்கின.

பிரிட்டன், சுவிஸ், கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே உட்பட சில நாடுகளில் இருந்த விடுதலைப் புலிகளின் கிளைகள், இந்த நெட்வேர்க்கில் இணைக்கப்பட்டிருந்த தகவல்கள் அவர்களிடம் இருந்தன. அந்த நாடுகளின் உளவுத் துறைகளின் ஒத்துழைப்பு கோரப்பட்டது. AIVDயின் அதிகாரிகள் இந்த நாடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேகரிக்கப்பட்ட பணத்துக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தபோது, இவர்களால் விசாரிக்கப்பட்ட அனைவருமே ஒரே திசையை நோக்கித்தான் கையைக் காட்டியிருக்கிறார்கள்.

“All roads lead to Rome” என்று சொல்லப்படுவதைபோல, எல்லாத் தகவல்களும், நார்வேயில் வசிக்கும் நெடியவன் என்ற நபரை நோக்கியே இருந்திருக்கின்றன.

அதையடுத்து நெடியவனை விசாரிக்கும் முடிவு நெதர்லாந்தில் எடுக்கப்பட்டது. நார்வேயின் உதவி கோரப்பட்டது. சட்டரீதியான இந்த விவகாரத்தில் நெதர்லாந்துக்கு உதவ, நார்வேக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

2011-ம் ஆண்டு, மே 18-ம் தேதி, உலகின் வெவ்வேறு நகரங்களிலும் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் பல நெடியவனின் தலைமையிலான குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டவை.

இந்த நிகழ்வுகள் நடைபெற்ற அதே மே 18-ம் தேதி, நெடியவன், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்!

இந்த விசாரணை மிகமிக முக்கியமானதாக கருதப்பட்டு செடியவனை விசாரிக்க நெதர்லாந்திலிருந்து பிரத்தியேகமாக ஒரு நீதிபதியும், ஆறு டிஃபென்ஸ் அட்டர்னிகளும் நார்வே சென்றிருந்தனர். நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில், மூடிய அறைக்குள் நெடியவன் மீதான விசாரணைகள் நடைபெற்றன. விசாரணைகள் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டன.

அதன்பின் நெடியவன் ஜாமீனில் விடப்பட்டார்.

இந்த விவகாரம் தொடங்கிய நெதர்லாந்தில், விடுதலை புலிகளுக்காக மிரட்டி பணம் சேகரித்தவர்கள் மீது Extortion, Material support to terrorism, Money laundering ஆகிய பிரிவுகளில், வழக்கு தொடரப்பட்டது. நெதர்லாந்து வழக்கு எண்: BU7200, 09/748801-09.

அந்த வழக்கில் 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம், 21-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், இலங்கைத் தமிழர்கள் 5 பேர் குற்றவாளிகளாக காணப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கில்தான் நெடியவன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஆனால், நெதர்லாந்து வழக்கு பதிவில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை.

இதற்கு காரணம், அப்போது, யுத்தம் முடிவடைந்து, இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டது. விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனும் இறந்து விட்டதில், வெளிநாடுகளில் இருந்த விடுதலைப்புலிகள் சொத்துக்கள், மில்லியன் கணக்கில் பணம் ஆகியவற்றில் மிகப் பெரும் பகுதி, நெடியவனின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.

இதனால், நெடியவனை வெளியே விட்டு வைத்தால்தான், யார் யாரிடம் என்ன இருக்கிறது என்பது தெரியும் என்பதால், அவரை வெளியே விட்டு வைத்து, கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். இலங்கை அரசு நெடியவன்மீது கை வைக்காமல் இவ்வளவு நாளும் காத்திருந்த காரணமும் இதுதான்.

இந்தப் பின்னணியில்தான், இப்போது இலங்கை நெடியவன் மீது இன்டர்போலில் ‘ரெட் நோட்டீஸ்’ கொடுத்து, அவரை கைது செய்ய நார்வேயுடன் பேச தொடங்கியுள்ளது.           

Friday, April 11, 2014

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கோபியை மற்றும் தேவியன் ஆகியோரை ராணுவம் சுற்றி வளைத்து படுகொலை செய்தது


விடுதலைப் புலிகள் உறுப்பினர் கோபி நேற்று அதிகாலையில் கொல்லப்பட்ட ஆபரேஷனில் சுமார் 2,000 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர் என இலங்கை பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

இலங்கை வடக்கு மாகாணம் நெடுங்கேணியில் விடுதலைப் புலிகள் உறுப்பினர் கோபியும் வேறு சிலரும் வீடு ஒன்றில் மறைந்திருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் சிலரே தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்த இடத்தை ராணுவம் சுற்றிவளைத்தபோது, கோபியும் மற்றும் இருவரும் துப்பாக்கியால் சுட்டபடி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

அதன்பின், நெடுங்கேணியில் இருந்து யாரும் வெளியேறாதபடி காவல் பலப்படுத்தப்பட்டது. இதனால் கோபியும், அவருடன் இருந்தவர்களும் நெடுங்கேணி பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.

அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டும் இலங்கையில் கட்டி எழுப்புவதற்காக கணிசமான பணம், ஹவாலா மூலம் ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்டது.

இந்தப் பணம், கொழும்புவில் உள்ள வர்த்தகர் ஒருவர் மூலமாக கிளிநொச்சியில் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இலங்கை தமிழ் எம்.பி. ஒருவர் இந்த பண விவகாரத்தை கையாண்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

அரசியல் காரணங்களுக்காக அவர் கைது செய்யப்படவில்லை (அல்லது, அவரே தகவல் கொடுப்பவராகவும் இருக்கலாம்!)

இந்தப் பணம் வழங்கப்பட்டபோதே, இலங்கை உளவுத்துறை அதை தெரிந்து கொண்டது என்றும் கூறப்படுகிறது.

அதன்பின் சில வாகனங்கள் வாங்கப்பட்டன. சில வீடுகள் இவர்களது பாவனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த விவகாரங்களில் இவர்களுக்கு உதவியவர்களில் சிலர், இலங்கை உளவுப் பிரிவின் ஆட்கள்.

ஆனால், உடனடியாக கோபியும், அவருடன் இருந்தவர்களும் கைது செய்யப்படவில்லை.

மாறாக, சுதந்திரமாக நடமாட விடப்பட்டனர். ஆனால், அவர்கள் தேடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. காரணம், இந்த அறிவிப்பின் பின்னரும் இவர்களுக்கு யார் யாரெல்லாம் உதவுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக!

அந்த பின்னணியில் சுமார் 65 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர், முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, சரணடைந்து, தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள்.

இவர்கள் கைதாக தொடங்கியதும், கோபியும் மற்றவர்களும், என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டார்கள். உடனே தலைமறைவாகி விட்டனர். ஐரோப்பாவில் இருந்து வந்த பணத்தில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வீடுகள் எதையும் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர்.

அதுவரை இவர்களை ட்ராக் பண்ணி வந்த உளவுத்துறையின் கண்காணிப்பில் இருந்து இவர்கள் மறைந்து விட்டார்கள்.

அதன்பின், பதவியா என்ற இடத்திலுள்ள காட்டுப் பகுதியில் சிலரது நடமாட்டம் இருப்பதாக அங்கு விறகு வெட்டி எடுத்துவரும் சிலரிடம் இருந்து தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 10-ம் தேதி) அந்த காட்டுப்பகுதியை ராணுவம் சோதனையிட்டபோது, 4 பேக்-பாக்குகள் கிடைத்தன. அவற்றுக்குள், உலர் உணவுப் பொருட்கள், உடைகள், மற்றும் சில மருந்துகள் இருந்தன.
அங்கிருந்தும் கோபியும், மற்றவர்களும் தப்பி சென்றுவிட்டிருந்தனர்.

இந்தப் பின்னணியில்தான், அதே நாள் (வியாழக்கிழமை) இரவு கோபியும் மற்ற இருவரும் நெடுங்கேணியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியுள்ள தகவல் கிடைத்தது.

அந்த வீட்டை சுற்றிவளைத்தபோதும், இவர்கள் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

ஆனால், சிறிய இடமான நெடுங்கேணியில் இவர்கள் எங்கே போயிருப்பார்கள் என்பதை கண்டுபிடிப்பது பெரிய காரியமல்ல. இவர்களது மறைவிடத்தை கண்டுபிடித்து, சுமார் 2,000 ராணுவத்தினரை அனுப்பி, சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்டவர்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் கோபி, வான்புலிகள் விமானி தேவியன் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர், அப்பன் என அழைக்கப்படும் நவரத்தினம் நவநீதனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.